பதிவு செய்த நாள்
15 மே2021
18:49
புதுடில்லி:இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான, ஹீரோ மோட்டோகார்ப், அதன் மூன்று ஆலைகளில், பகுதி அளவிலான உற்பத்தியை, நாளை முதல் துவங்க இருப்பதாக தெரிவித்துள்ளது.
தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் அதிகரித்ததை அடுத்து, ஹீரோ மோட்டோகார்ப், தன்னுடைய, 6 ஆலைகளில், கடந்த ஏப்ரல் 22ம் தேதியிலிருந்து, மே 2ம் தேதி வரை பணிநிறுத்தத்தை அறிவித்தது. ஆனால், பாதிப்புகள் குறையாததால் மே 16ம் தேதி வரை பணிநிறுத்தத்தை நீட்டித்தது.இந்நிலையில், தற்போது மூன்று ஆலைகளில் மட்டும் அதன் உற்பத்தியை பகுதியளவில் மேற்கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளது.
இது குறித்து, மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:ஹரியானா மாநிலத்தில் உள்ள குருகிராம், தாரூஹெரா மற்றும் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ஹரித்வார் ஆகிய இடங்களில் உள்ள மூன்று ஆலைகளில், ஒரு ஷிப்ட் உற்பத்தி நாளை முதல் துவங்கப் படுகிறது. நிலைமையை நாங்கள் உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். மீதமுள்ள ஆலைகளில், உற்பத்தி படிப்படியாக துவக்கப்படும் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|