ஆயிரம் சந்தேகங்கள் !சிறு வங்கிகளில் பணத்தை வைக்கலாமா?ஆயிரம் சந்தேகங்கள் !சிறு வங்கிகளில் பணத்தை வைக்கலாமா? ...  மொத்தவிலை பணவீக்கம் இரட்டை இலக்க உயர்வு மொத்தவிலை பணவீக்கம் இரட்டை இலக்க உயர்வு ...
கோவிட் நோயாளிகளுக்கு தன்னம்பிக்கையூட்டும் இந்துஜா குழுமம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 மே
2021
19:54

ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக பல்வேறு தரப்பினருக்கும் உதவிக்கரம் நீட்டி வரும் இந்துஜா குழுமத்தின் இந்துஜா அறக்கட்டளை, தற்போதைய கோவிட்19 காலகட்டத்தில் மக்களுக்கு தன்னம்பிக்கை கொடுக்கும் வகையில் மனநலம் மற்றும் நல்வாழ்வுத் துறையில் கால்பதித்துள்ளது. இதற்காக இந்துஜா அறக்கட்டளையானது சோப்ரா அறக்கட்டளை, தி ஜான் டபிள்யூ பிரிக் மனநல அறக்கட்டளை மற்றும் சி.ஜி. கிரியேட்டிவ்ஸ் ஆகியவற்றுடன் இணைந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து இந்துஜா மற்றும் சோப்ரா, தி ஜான் உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து நெவர் அலோன் என்ற பெயரில் சர்வதேச அளவிலான ஸ்பாட்லைட் இந்தியா (மெய்நிகர்) உச்சிமாநாட்டினை நடத்த உள்ளன. இதற்காக இந்துஜா அறக்கட்டளை இணை நிதியுதவி செய்துள்ளது.
ஸ்பாட்லைட் இந்தியாவில் சத்குரு, மற்றும் அபெய் தியோல் உள்ளிட்ட பல நட்சத்திர பேச்சாளர்கள் பங்கேற்று கரோனா நோயாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு தன்னம்பிக்கையூட்டுவார்கள். இந்த மெய்நிகர் உச்சி மாநாடு வருகிற 21ம் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 6.30 மணிக்கு பேஸ்புக், யூடியூப் மற்றும் பிற ஊடக தளங்களில் நேரடியாக ஒளிபரப்பப்படும். இதில் பங்கேற்க விரும்புவோர் இலவசமாக <https://neveralonesummit.live/> என்ற முகவரியில் இணைந்து தங்கள் மன ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்திக்கொள்ளலாம்.

இந்த மெய்நிகர் உச்சி மாநாட்டில் முன்னணி மனநல வல்லுநர்கள், ஆரோக்கிய வல்லுநர்கள், மூளை விஞ்ஞானிகள், கலைஞர்கள் மற்றும் இசைக்கலைஞர்கள் பங்கேற்று உலகளாவிய பார்வையாளர்களுக்கு மன மற்றும் உணர்ச்சி ரீதியான பின்னடைவை சரிசெய்வதற்கான மனநல உத்திகள், தீர்வுகள் மற்றும் யோசனைகளைப் பகிர்ந்து கொள்வார்கள். இந்த இக்கட்டான சூழலில் சக மனிதனுக்கு தன்னம்பிக்கை, உத்வேகம் மற்றும் சமூக உணர்வை வழங்க நாங்கள் விரும்புகிறோம்.

ஆன்மீகம் சார்ந்த ஆலோசனையானது மனிதனின் சுயமரியாதையையும் நம்பிக்கையையும் மீண்டும் பெறுவதற்கு உதவும் மற்றும் ஒருவர் ஒருபோதும் தனியாக இல்லை என்பதை உணர முடியும். இந்த உச்சிமாநாடு அத்தகைய உயர்ந்த சாத்தியங்களின் முழு ஒருங்கிணைப்பையும் முன்வைக்கிறது” என்று இந்துஜா குழுமத்தின் இணைத் தலைவரும், இந்துஜா அறக்கட்டளையின் அறங்காவலருமான கோபிசந்த் பி. இந்துஜா தெரிவித்துள்ளார்.

இந்த முயற்சி குறித்து இந்துஜா அறக்கட்டளையின் தலைவர் பால் ஆபிரகாம் கூறுகையில், “மனித வரலாற்றில் மிகவும் கடினமான காலங்களில் ஒன்றில் நாம் பயணிக்கிறோம். இது போன்ற ஒரு நெருக்கடியில் நமது மன மற்றும் உணர்ச்சி நல்வாழ்வில் கவனம் செலுத்துவதற்கு முற்றிலும் இடமளிக்காமல் நமது உடல் ஆரோக்கியம் முன்னுரிமை பெறுகிறது. நெவர் அலோன் உச்சிமாநாடு 2021இன் ஒரு பகுதியாக ‘ஸ்பாட்லைட் இந்தியா’வை ஏற்பாடு செய்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், என்றார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)