மொத்தவிலை பணவீக்கம் இரட்டை இலக்க உயர்வு மொத்தவிலை பணவீக்கம் இரட்டை இலக்க உயர்வு ...  மெய்நிகர் நாணயங்களுக்கு  சீனா திடீர் தடை மெய்நிகர் நாணயங்களுக்கு சீனா திடீர் தடை ...
இந்திய வர்த்தக மீட்சி குறித்து ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 மே
2021
21:34

புதுடில்லி:இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகள், மார்ச் மாதத்துடன் முடிவடைந்த இந்த ஆண்டின் முதல் காலாண்டில், மற்ற நாடுகளைவிட இறக்குமதி மற்றும் ஏற்றுமதியில் ஒப்பீட்டளவில் சிறந்ததாக உள்ளதாக, ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்து உள்ளது.

ஏற்றுமதி

மேலும் உலக நாடுகளின் வர்த்தக மீட்சி, கொரோனா பாதிப்புகளையும் மீறி அதிகரித்து உள்ளதாகவும் தெரிவித்து உள்ளது.இதன் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:நடப்பு ஆண்டின் முதல் காலாண்டில் பொருட்கள் மற்றும் சேவைகளில், உலகளாவிய வர்த்தகத்தின் மதிப்பு, முந்தைய காலாண்டுடன் ஒப்பிடும்போது 4 சதவீதம் அதிகமாகும்.

முந்தைய ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடும்போது, கிட்டத்தட்ட 10 சதவீதம் அதிகரித்து உள்ளது.நடப்பு ஆண்டின் முதல் காலாண்டில் வர்த்தகம் மீட்சியடைந்து தொடர்வதற்கு காரணம், கிழக்கு ஆசிய நாடுகளின் வலுவான ஏற்றுமதி செயல்பாடுகள் ஆகும்.அதிகரிப்புமதிப்பீட்டு காலாண்டில், சரக்குகளின் வர்த்தக மதிப்பு, தொற்றுநோய் பரவுவதற்கு முன் இருந்த நிலையைவிட அதிகரித்துள்ளது.

ஆனால், சேவைகள் வர்த்தகம் சராசரிக்கும் குறைவாகவே இருந்தது.ஒரு சில நாடுகளைத் தவிர்த்து, பொதுவாக பெரிய பொருளாதார நாடுகளில், வர்த்தக மீட்சி ஏற்பட்டிருக்கிறது. இவற்றில், இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகளில் ஒப்பீட்டளவில் சிறப்பாக உள்ளது.இந்தியாவைப் பொறுத்தவரை, சரக்கு இறக்குமதி, மதிப்பீட்டு காலாண்டில் 45 சதவீதம் அதிகரித்துள்ளது.

சேவைகள் இறக்குமதி 14 சதவீதம் அதிகரித்துள்ளது.ஏற்றுமதி வகையில், சரக்குகளில் 26 சதவீதமும்; சேவைகளில் 2 சதவீதமும் அதிகரித்துள்ளது.இவ்வாறு ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)