பதிவு செய்த நாள்
19 மே2021
21:34
புதுடில்லி:இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகள், மார்ச் மாதத்துடன் முடிவடைந்த இந்த ஆண்டின் முதல் காலாண்டில், மற்ற நாடுகளைவிட இறக்குமதி மற்றும் ஏற்றுமதியில் ஒப்பீட்டளவில் சிறந்ததாக உள்ளதாக, ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்து உள்ளது.
ஏற்றுமதி
மேலும் உலக நாடுகளின் வர்த்தக மீட்சி, கொரோனா பாதிப்புகளையும் மீறி அதிகரித்து உள்ளதாகவும் தெரிவித்து உள்ளது.இதன் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:நடப்பு ஆண்டின் முதல் காலாண்டில் பொருட்கள் மற்றும் சேவைகளில், உலகளாவிய வர்த்தகத்தின் மதிப்பு, முந்தைய காலாண்டுடன் ஒப்பிடும்போது 4 சதவீதம் அதிகமாகும்.
முந்தைய ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடும்போது, கிட்டத்தட்ட 10 சதவீதம் அதிகரித்து உள்ளது.நடப்பு ஆண்டின் முதல் காலாண்டில் வர்த்தகம் மீட்சியடைந்து தொடர்வதற்கு காரணம், கிழக்கு ஆசிய நாடுகளின் வலுவான ஏற்றுமதி செயல்பாடுகள் ஆகும்.அதிகரிப்புமதிப்பீட்டு காலாண்டில், சரக்குகளின் வர்த்தக மதிப்பு, தொற்றுநோய் பரவுவதற்கு முன் இருந்த நிலையைவிட அதிகரித்துள்ளது.
ஆனால், சேவைகள் வர்த்தகம் சராசரிக்கும் குறைவாகவே இருந்தது.ஒரு சில நாடுகளைத் தவிர்த்து, பொதுவாக பெரிய பொருளாதார நாடுகளில், வர்த்தக மீட்சி ஏற்பட்டிருக்கிறது. இவற்றில், இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகளில் ஒப்பீட்டளவில் சிறப்பாக உள்ளது.இந்தியாவைப் பொறுத்தவரை, சரக்கு இறக்குமதி, மதிப்பீட்டு காலாண்டில் 45 சதவீதம் அதிகரித்துள்ளது.
சேவைகள் இறக்குமதி 14 சதவீதம் அதிகரித்துள்ளது.ஏற்றுமதி வகையில், சரக்குகளில் 26 சதவீதமும்; சேவைகளில் 2 சதவீதமும் அதிகரித்துள்ளது.இவ்வாறு ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|