பதிவு செய்த நாள்
19 மே2021
21:40
புதுடில்லி:‘கிரிப்டோகரன்சி’ எனும், மெய்நிகர் நாணயத்துக்கான பரிவர்த்தனைகள் தொடர்பான சேவைகளை, நிதி நிறுவனங்கள் மற்றும் பேமென்ட் நிறுவனங்கள் வழங்குவதற்கு, சீனா தடை விதித்துள்ளது.
மேலும், இத்தகைய நாணய வர்த்தகத்தில் ஈடுபடும் முதலீட்டாளர்களையும் சீன அரசு எச்சரித்து உள்ளது.வெகு வேகமாக வளர்ந்து வரும் இந்த டிஜிட்டல் சந்தையை கட்டுப் படுத்த, சீனா இப்படி ஒரு நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறது.
இந்த தடையை அடுத்து வங்கிகள், ஆன்லைன் பேமென்ட் நிறுவனங்கள் உள்ளிட்டவை, வாடிக்கையாளர்களுக்கு மெய்நிகர் நாணயம் சம்பந்தமான எந்த ஒரு சேவையையும் இனி வழங்க முடியாது. இது குறித்து, பதிவு, வர்த்தகம், செட்டில்மென்ட் ஆகிய மூன்று பிரிவுகளுக்கான அமைப்புகள், கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன.
அதில், மெய்நிகர் நாணயங்களின் சமீபத்திய அதீத விலை ஏற்ற, இறக்கங்கள் காரணமாக அவை, மக்களுக்கான பாதுகாப்பான முதலீடாக இல்லை.மேலும், வழக்கமான பொருளாதாரம் மற்றும் நிதி ஒழுங்கை அது சீர்குலைப்பதாகவும் இருக்கிறது என்று தெரிவித்துள்ளன.
மெய்நிகர் நாணய எக்சேஞ்சுகள், புதிய நாணய வெளியீடு ஆகியவற்றுக்கு சீனா தடை விதித்து இருந்தாலும், தனிநபர்கள் மெய்நிகர் நாணயங்களை வைத்திருப்பதை சீன அரசு தடை செய்யவில்லை.சீனாவின் இந்த நடவடிக்கையை அடுத்து, பிட்காய்ன் உள்ளிட்ட மெய்நிகர் நாணயங்களின் விலை சரிவைக் கண்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|