பதிவு செய்த நாள்
19 மே2021
21:41
புதுடில்லி:‘சுப்ரியா லைப் சயின்ஸ்’ நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, செபியிடம் விண்ணப்பித்துள்ளதாக தெரிவித்து உள்ளது.
இந்நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக, 1,200 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.இந்த பங்குவெளியீட்டின்போது, 200 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பங்குகளையும்; 1,000 கோடி ரூபாய்க்கு, பங்கு தாரர்களின் கைவசம் இருக்கும் பங்குகளையும் விற்பனைக்கு விடுக்க இருக்கிறது.
பங்குகளை வெளியிட்டு திரட்டும் நிதியை, எதிர்கால மூலதன தேவைகளுக்கு பயன் படுத்தவும்; கடனை அடைக்கவும்; பொதுவான நிர்வாக தேவைகளுக்காகவும் பயன்படுத்திகொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.இந்நிறுவனம், மருந்து பொருட்களை தயாரித்து, சப்ளை செய்து வருகிறது. மேலும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறது.
கிட்டத்தட்ட, 39 வகையான மருந்து பொருட்களை, இந்நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்நிறுவனத்தின் பங்கு வெளியீட்டுக்கான பணிகளை, ஐ.சி.ஐ.சி.ஐ., செக்யூரிட்டீஸ், ஆக்சிஸ் கேப்பிட்டல் ஆகிய நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|