பதிவு செய்த நாள்
19 மே2021
21:52
புதுடில்லி:டாடா குழுமத்தை சேர்ந்த, டி.சி.எஸ்., எனும், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், நிர்வாக இயக்குனருமான ராஜேஷ் கோபிநாதன் கடந்த நிதியாண்டில், 20.36 கோடி ரூபாயை ஊதியமாக பெற்றுள்ளதாக, நிறுவனத்தின் ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முந்தைய நிதியாண்டான 2019 – 2020ல், இவர் மொத்த சன்மானமாக 13.3 கோடி ரூபாய் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.நிறுவனத்தின் ஆண்டறிக்கையின்படி கடந்த 2020 – 2021 நிதியாண்டில், கோபிநாதன் 1.27 கோடி ரூபாயை சம்பளமாகவும்; 2.09 கோடி ரூபாயை சலுகை உள்ளிட்டவைகளின் வாயிலாகவும்; 17 கோடி ரூபாயை கமிஷனாகவும் பெற்றுள்ளார்.
டி.சி.எஸ்., நிறுவனத்தின் தலைமை இயக்க அதிகாரியான என்.கணபதி, கடந்த நிதியாண்டில் 16.1 கோடி ரூபாயை ஊதியமாக பெற்றுள்ளார். இதில் 1.21 கோடி ரூபாயை சம்பளமாகவும்; 1.88 கோடி ரூபாயை சலுகையாகவும்; 13 கோடி ரூபாயை கமிஷனாகவும் பெற்றுள்ளார்.
கடந்த நிதியாண்டில், நிர்வாக பொறுப்பில் இருக்கும் நபர்களின் சன்மான உயர்வு 55.22 சதவீதம் ஆகும்.இந்தியாவின் சராசரி ஊதிய உயர்வு 5.2 சதவீதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.கொரோனாவால் வருவாய் சிறிது சரிவைக் கண்டாலும், கடந்த நிதியாண்டில், மொத்தம் 1.64 லட்சம் கோடி ரூபாய் வருவாயை இந்நிறுவனம் ஈட்டியுள்ளது.
மேலும் ஐ.டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|