பதிவு செய்த நாள்
19 மே2021
21:56
புதுடில்லி:‘ராயல் என்பீல்டு’ நிறுவனம், கிட்டத்தட்ட, 2.37 லட்சம் வாகனங்களை, அதில் உள்ள குறைபாட்டை நீக்கி தரும் வகையில், அவற்றை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது.
இந்நிறுவனத்தின், ‘கிளாஸிக், புல்லட், மீட்டியார்’ ஆகிய மாடல்களில், இக்னிஷியன் காயிலில் பழுது உள்ளதாக தெரிய வந்ததை அடுத்து, இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து, 2.37 லட்சம் வாகனங்களை திரும்பப் பெற்று, சரிசெய்து வழங்க உள்ளது, இந்நிறுவனம்.
இந்த பழுது காரணமாக, வாகனத்தின் திறன் குறைவது, எலக்ட்ரிக் ஷார்ட் சர்க்யூட் போன்ற பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்று ராயல் என்பீல்டு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் முதல், நடப்பு ஆண்டு ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில் தயாரிக்கப்பட்ட மற்றும் விற்கப்பட்ட வாகனங்களை, திரும்ப பெற உள்ளதாகவும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த வாகனங்கள் திரும்ப பெறப்பட்டு, பரிசோதனை செய்து, பழுது இருப்பது காணப் பட்டால், அந்த பாகத்தை மாற்றி, புது பாகத்தை பொருத்தி வழங்கப்படும் என்றும், ராயல் என்பீல்டு தெரிவித்துள்ளது.இந்த பழுது அரிதானது தான் எனினும், வாகன ஓட்டிகள் தகுந்த கவனத்துடன் இருக்குமாறும் நிறுவனம் கேட்டுக்கொண்டிருக்கிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|