பதிவு செய்த நாள்
20 மே2021
21:53
புதுடில்லி:தொற்றுநோயின் இரண்டாவது அலை காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளை அடுத்து, இக்கட்டான நிலையில் தங்களுக்கு ஆதரவை தருமாறு அனைத்து மால் உரிமையாளர்களையும், கட்டட உரிமையாளர்களையும், இந்திய தேசிய உணவகங்களின் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
இது குறித்து, சங்கத்தின் தலைவர் அனுராக் கட்ரியார் கூறியதாவது:முதல் அலையில் எப்படியோ சமாளித்துவிட்டோம். இப்போது இரண்டாவது அலை வந்துள்ளது. இப்போதும் முன்பு போல வணிக பாதிப்பு, வேலை இழப்பு ஆகியவற்றை தடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.இதையடுத்து, சங்கத்தின் வாயிலாக அனைத்து முக்கிய மால் உரிமையாளார்களுக்கு தனிப்பட்ட வகையில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
வணிகங்கள் மூடப்பட்ட நிலையில், வாடகை, பொதுவான பராமரிப்பு கட்டணம் ஆகியவற்றில் விலக்கு அளிக்க வேண்டும்.இது குறித்து, அடுத்தகட்டமாக மத்திய மாநில அரசுகளிடமும் பேச உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|