பதிவு செய்த நாள்
21 மே2021
19:21
வாஷிங்டன்:இந்தியாவுடனான பேச்சை வலுப்படுத்தவும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை அதிகரிக்கவும் பன்னாட்டு நிதியம் தயாராக இருப்பதாக, அதன் செய்தி தொடர்பாளர் ஜெர்ரி ரைஸ் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:இந்தியாவில் நடைபெறுவதை நாங்கள் மிகவும் உன்னிப்பாக கவனித்துக்கொண்டு வருகிறோம். தொற்று எண்ணிக்கை தொடர்ந்து குறையும் என நாங்கள் நம்புகிறோம்.உலகளவில், இந்தியா ஒரு முக்கியமான பொருளாதாரம் ஆகும்.
ஜூலை மாதத்தில் இந்தியாவிற்கும் உலகப் பொருளாதாரத்துக்குமான எங்களுடைய வளர்ச்சி கணிப்பை நாங்கள் மறுபரிசீலனை செய்வோம். இந்தியாவை பொறுத்தவரை, தொற்றுநோயை எதிர்த்து போராடுவதற்கான ஒருங்கிணைந்த கொள்கையுடன் செயல்படுவது மிகவும் முக்கியமாகும்.
குறிப்பாக, தடுப்பூசி பிரசாரத்தை விரைவுபடுத்துதல், சுகாதார துறைக்கு அதிக நிதியாதாரங்களை வழங்குதல், மிகவும் பாதிப்படையக் கூடியவர்களுக்கு தேவையான சமூக ஆதரவை அளித்தல் ஆகியவற்றை உடனடியான முன்னுரிமை கொள்கையாக நாங்கள் பார்க்க்கிறோம்இவ்வாறு ரைஸ் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|