இந்தியாவுக்கு தொழில்நுட்ப ஒத்துழைப்பு:பன்னாட்டு நிதியம் அறிவிப்பு இந்தியாவுக்கு தொழில்நுட்ப ஒத்துழைப்பு:பன்னாட்டு நிதியம் அறிவிப்பு ...  நாளை தங்க பத்திர வெளியீடு கிராம் 4,842 ரூபாயாக நிர்ணயம் நாளை தங்க பத்திர வெளியீடு கிராம் 4,842 ரூபாயாக நிர்ணயம் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
பிட்காய்ன் விலை சரிவு காரணமாக உறவை முறிக்கும் இந்திய வங்கிகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 மே
2021
19:24

புதுடில்லி:பிட்காய்ன் விலை சரிவு மற்றும், அது தொடர்பான குழப்பங்கள் காரணமாக, ‘பேடிஎம் பேமென்ட் பேங்க்’, மெய்நிகர் நாணய சந்தைகளுடனான உறவைத் துண்டித்துக் கொண்டுள்ளது.

மெய்நிகர் நாணயங்களை வாங்குவது அல்லது விற்பதை நேற்று முதல் அனுமதிக்கப் போவதில்லை என தெரிவித்துள்ளது. மெய்நிகர் நாணயங்களுக்கான சந்தைகளுடன் உள்ள உறவை மறுபரிசீலனை செய்யுமாறு, ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வமற்ற முறையில் அண்மையில் வங்கிகளை கேட்டுக்கொண்டது.

இதன் தொடர்ச்சியாக, இந்த வார துவக்கத்தில் பல வங்கிகள், மெய்நிகர் நாணய சந்தைகளுடனான தொடர்பிலிருந்து வெளியேறின.இந்நிலையில், பேடிஎம் பேமென்ட் பேங்க் நிறுவனமும், அதன் தளத்தை பயன்படுத்தி, மெய்நிகர் நாணயங்களை வாங்குவது அல்லது விற்பதை நேற்று முதல் அனுமதிக்கப்போவதில்லை என தெரிவித்துள்ளது. மேலும், மெய்நிகர் நாணய சந்தைகளுடனான உறவுகளையும் அது துண்டித்துக் கொண்டுவிட்டதாகவும் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, பேடிஎம் நிறுவனத்தின் போட்டி நிறுவனமான, ‘பேபால்’ நிறுவனமும், மெய்நிகர் நாணய சந்தைகளின் தொடர்பிலிருந்து வெளியேறிவிடும் என தெரிகிறது. ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தலின் பின்னணியில் ஏற்கனவே, ஜெப்பே, வாஜிர்எக்ஸ் பையுகாய்ன் போன்ற பல மெய்நிகர் நாணய சந்தைகளிலிருந்து, பல வங்கிகள் வெளியேறிவிட்டன.

பேடிஎம் பேமென்ட் பேங்க் என்ன காரணத்தினால் மெய்நிகர் நாணய சந்தைகளிலிருந்து வெளியேறியது என்பது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.இப்படி, பல வங்கிகள் வெளியேறியதை அடுத்து, மெய்நிகர் நாணய சந்தைகள், இந்திய முதலீட்டாளர்களிடம் இருந்து முதலீடுகளை பெறுவதற்கான வாய்ப்பு வசதிகள் குறைந்துவிட்டன.

பிட்காய்ன் மீதான முதலீட்டை, ‘டெஸ்லா’ நிறுவனம் திரும்ப பெற்றது, சீனாவின் தடை போன்ற பல்வேறு காரணங்களால், மெய்நிகர் நாணயங்களின் விலைகளில் கடுமையான சரிவு ஏற்பட்டு வருகிறது.இதன் தொடர்ச்சியாகவே, இந்தியாவில் செயல்படும் வங்கிகள், மெய்நிகர் நாணய சந்தைகளிலிருந்து வெளியேறி வருகின்றன.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)