பதிவு செய்த நாள்
21 மே2021
19:25
புதுடில்லி:மருந்துகளுக்கான சில்லரை விற்பனை நிறுவனமான ‘மெட்பிளஸ்’, புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கான முயற்சிகளை துவக்கி உள்ளது. இந்நிறுவனம் புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக 2,000 கோடி ரூபாயை திரட்டவும் திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
முதற்கட்டமாக புதிய பங்கு வெளியீட்டுக்கான பணிகளை நிர்வகிக்க மூன்று முதலீட்டு வங்கிகளை தேர்வு செய்துள்ளது. ஆக்சிஸ் கேப்பிட்டல், நோமுரா மற்றும் எடெல்வைஸ் பைனான்ஷியல் பேங்க் ஆகியவை தேர்வு செய்யப்பட்டுள்ளன. நான்காவதாக மேலும் ஒரு வங்கி தேர்வு செய்யப்பட உள்ளது.இந்தியாவில் அதிக அளவில் மருந்தகங்களை வைத்து சில்லரை விற்பனை செய்து வரும் நிறுவனங்களில் இரண்டாவது இடத்தில் உள்ளது மெட்பிளஸ் நிறுவனம். 1,800 மருந்தகங்கள் உள்ளன.
இந்நிறுவனதில் வார்பர்க் பின்கஸ், பிரேம்ஜி இன்வெஸ்ட் போன்ற நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.ஹைதராபாதை சேர்ந்த இந்நிறுவனம், பங்கு வெளியீட்டின் வாயிலாக சில்லரை மருந்து விற்பனையில் முதலிடத்தை கைப்பற்ற திட்டமிடுகிறது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|