பதிவு செய்த நாள்
21 மே2021
19:27
புதுடில்லி:‘எம்.ஜி., மோட்டார் இந்தியா’ நிறுவனம், அதன் வாடிக்கையாளர்களுக்கு உதவும் வகையில், ஆன்லைன் வாயிலான இலவச மருத்துவ ஆலோசனை சேவையை அறிமுகம் செய்துள்ளது.
கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், எம்.ஜி.மோட்டார் நிறுவனம் அதன் வாடிக்கையாளார்களுக்கு ஆன்லைன் வாயிலாக, இருபத்திநான்கு மணி நேர இலவச ஆலோசனை சேவையை வழங்க உள்ளது.எம்.ஜி., நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள், இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்.
அவர்களுக்கு மருத்துவர்களால் தரமான ஆலோசனைகள் வழங்கப்படும்.இந்த சேவையை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ள, நிறுவனத்தின் இணைய பக்கத்திலோ அல்லது, ‘மை எம்.ஜி., செயலி’ வாயிலாகவோ பதிவு செய்துகொள்ள வேண்டும்.
இதுகுறித்து, நிறுவனத்தின் தலைமை வர்த்தக அதிகாரி கவுரவ் குப்தா கூறியதாவது:இந்த சேவையை, ‘டாக்டர் 24x7 பிளாட்பார்ம்’ உடன் இணைந்து வழங்குகிறோம். முதல்கட்ட ஆலோசனை வழங்கப்பட்ட பிறகு, நிபுணர்களைக் கொண்ட மருத்துவ குழு, அவர்களை தொடர்ந்து கண்காணித்து வரும்.இவ்வாறு கூறினார்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|