இந்தியாவில் ‘டிஸ்பிளே’ தேவை பல மடங்கு அதிகரிக்கும் இந்தியாவில் ‘டிஸ்பிளே’ தேவை பல மடங்கு அதிகரிக்கும் ... ஆயிரம் சந்தேகங்கள்தேவையற்ற வங்கி கணக்கை முடிப்பது எப்படி? ஆயிரம் சந்தேகங்கள்தேவையற்ற வங்கி கணக்கை முடிப்பது எப்படி? ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
‘கிரெடிட் கார்டு’ கடனை சமாளிப்பது எப்படி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 மே
2021
19:08

‘கிரெடிட் கார்டு’ வைத்திருப்பவர்கள் அதன் பயன்பாட்டில் கவனமாக இருக்க வேண்டும். பணம் செலுத்த கார்டை தேய்ப்பது எளிதானது என்றாலும், அதை திரும்பிச் செலுத்துவது கடினமாக அமைந்து விடக்கூடாது. கார்டு நிலுவைத் தொகையை உரிய காலத்தில் திரும்பிச் செலுத்தாவிட்டால், அதற்காக விதிக்கப்படும் கட்டணங்களும், அபராதங்களும் கடன் வலையில் சிக்க வைத்து விடலாம்; அதோடு கிரெடிட் ஸ்கோரையும் பாதிக்கும். கிரெடிட் கார்டு நிலுவைத் தொகையை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டால், சமாளிக்கும் வழிமுறைகளை பார்க்கலாம்.


அதிக வட்டி:


கிரெடிட் கார்டு ‘பில்’ தொகையை முழுதும் செலுத்த தவறினால், நிலுவைத் தொகை மீது கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். இது ஆண்டுக்கு, 40 சதவீதம் வரை அமையலாம். அது மட்டுமல்ல, புதிய பரிவர்த்தனைகளுக்கான வட்டி இல்லாத கால சலுகையை இழக்க வேண்டியிருக்கும். இது மேலும் பாதிப்பை ஏற்படுத்தும்.

கூடுதல் கட்டணம்:


நிலுவைத் தொகையை செலுத்தாத வரை, கார்டு மூலம் மேற்கொள்ளும் புதிய பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். மேலும், குறைந்த பட்ச தொகையை செலுத்தவில்லை எனில், தாமத கட்டணம் செலுத்த வேண்டும். பில் தொகைக்கு ஏற்ப இது கணிசமாக அமையலாம். இது, கிரெடிட் ஸ்கோரையும் பாதிக்கும்.

மாத தவணை:


நிலுவைத் தொகையை உடன் செலுத்திவிடுவதே ஏற்றது. இவ்வாறு செலுத்த முடியவில்லை எனில், நிலுவைத் தொகை அல்லது அதன் ஒரு பகுதியை மாதத் தவணையாக செலுத்தும் வசதியை நாடலாம். திரும்பிச் செலுத்தும் ஆற்றலுக்கு ஏற்ப இந்த வசதியை கவனமாக திட்டமிட்டு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

‘பாலன்ஸ்’ மாற்று:


ஒரு சில மாதங்களில் நிலுவைத் தொகை முழுவதையும் செலுத்த முடியும் என்ற நம்பிக்கை இருந்தால், அந்த தொகையை கைவசம் உள்ள வேறு ஒரு கார்டுக்கு மாற்றிக் கொள்ளலாம். ஆனால், குறித்த காலத்தில் அடைக்கவில்லை எனில், இந்த தொகைக்கும் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.

தனிநபர் கடன்:


கார்டு கடனை செலுத்த முடியாத நிலை இருந்தால், மாற்று வழிகளை ஆராய வேண்டும். கிரெடிட் கார்டு கடன் என்பது அதிக வட்டி மற்றும் அபராதம் கொண்டது. எனவே, பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்க, தனிநபர் கடன் வசதியில் கார்டு கடனை அடைக்கலாம். கடன் நிர்வாகம் முக்கியம் என்பதை உணர வேண்டும்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)