பதிவு செய்த நாள்
24 மே2021
23:51
புதுடில்லி : பெருந்தொற்று இரண்டாம் அலை காரணமாக, ஆடம்பர ஓட்டல்கள் வணிகத்தை தக்க வைத்துக் கொள்ள, இதுவரை வழங்கியிராத வகையில் வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளையும், தள்ளுபடிகளையும் வழங்கி வருகின்றன.
கொரோனா தொற்று காரணமாக, ஏற்கனவே சரிவைக் கண்டுள்ள ஓட்டல் துறை, தற்போதைய இரண்டாவது அலை காரணமாக, கடுமையான வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.இதனால், பல ஓட்டல்கள், வாடிக்கையாளர்கள் நேரடியாக அறைகளை பதிவு செய்தால், கூடுதல் சலுகைகளை வழங்குகின்றன. சில ஓட்டல்கள், 35 சதவீதம் வரைகூட அறை வாடகையில் தள்ளுபடி தருகின்றன.இன்னும் சில ஓட்டல்கள், மூன்று வேளை உணவு, விமான நிலையத்துக்கும், ஓட்டலுக்கும் இடையேயான வாகன வசதி என கூடுதல் சலுகைகளையும் வழங்குகின்றன.
இந்நிலை குறித்து, ‘ரேடிசன் ஓட்டல்’ குழுமத்தின் தெற்காசிய துணை தலைவர் ஜுபின் சக்சேனா கூறுகையில், ‘‘கட்டணங்கள் கணிசமாக பாதிக்கப்பட்டுள்ளன, மேலும், தொற்றுநோய்க்கு முந்தைய நிலைகளுக்கு செல்ல மூன்று ஆண்டுகள் ஆகும். ‘‘இரண்டாவது அலையின் முழு தாக்கத்தையும், மீட்சி எப்படி இருக்கும் என்பதையும் இப்போதே கணிக்க முடியவில்லை,’’ என, தெரிவித்துள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|