பதிவு செய்த நாள்
25 மே2021
19:45
சென்னை:கூடுதலாக பெறப்பட்ட அலைக்கற்றைகளை தமிழகத்தில் பயன்படுத்துவதன் வாயிலாக, இணைய வேகம் அதிகரித்துள்ளது என, ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
மத்திய தொலைத் தொடர்பு துறை சார்பில், சமீபத்தில் அலைக்கற்றை ஏலம் நடத்தப் பட்டது. இதில், பல்வேறு தொலைத் தொடர்பு நிறுவனங்கள் பங்கேற்று, அலைக்கற்றை ஒதுக்கீட்டை பெற்றனர்.இதில், ரிலையன்ஸ் ஜியோ தொலைத் தொடர்பு நிறுவனம், 850 மெகா ஹெர்ட்ஸ் பேண்டில், 5 மெகா ஹெர்ட்ஸ்; 1800 மெகா ஹெர்ட்ஸ் பேண்டில், 5 மெகா ஹெர்ட்ஸ் மற்றும் 2,300 மெகா ஹெர்ட்ஸ் பேண்டில், 10 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றைகளை பெற்றது.
இதில், தமிழகம் முழுதும் உள்ள, 22 ஆயிரம் தொலைத் தொடர்பு சிக்னல் கோபுரம் அமைவிடங்களில், கூடுதலாக பெற்ற அலைக்கற்றைகளை பயன்படுத்தும் நடவடிக்கையை துவங்கி உள்ளது.மேற்கூறிய மூன்று அலைக்கற்றைகளின் வாயிலாக பயன்பாட்டிற்கு கிடைக்கக் கூடிய மொத்த அலைக்கற்றைகளின் அகலம், 50 சதவீதம் முன்னேற்றம் அடைந்துள்ளது.இதனால், தமிழக ஜியோ வாடிக்கையாளர்கள் இன்டர்நெட்டின் தரவு வேகம் அதிகரிக்கும் என, ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏர்டெல் வேகம் உயர்வு
வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த வலையமைப்பை வழங்க, மத்திய தொலைத் தொடர்புத் துறையின், அலைக்கற்றை ஏலத்தில், 1,800 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றை பேண்டில், 5 மெகாஹெர்ட்ஸ் கூடுதலாக பெற்றுள்ளது. இவை தமிழகத்தில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.இதன் வாயிலாக, தமிழகத்தில் 65 மெகா ஹெர்ட்ஸ் அளவில், மிகப்பெரிய அலைக்கற்றை வங்கியை, ஏர்டெல் கொண்டுள்ளது.
இதனால், நகரங்கள் மட்டுமின்றி, கிராமங்களிலும் உயர்வேக தரவு சேவைகளை, வாடிக்கை யாளர்கள் பெற முடியும் என, பார்தி ஏர்டெல் நிறுவனம் தெரிவித்து உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|