‘பிளிப்கார்ட்’ நிறுவனத்தில் 23 ஆயிரம் பேருக்கு வேலை ‘பிளிப்கார்ட்’ நிறுவனத்தில் 23 ஆயிரம் பேருக்கு வேலை ...  ‘அத்தியாவசிய பொருட்கள் என பிரித்து பார்ப்பது தேவையில்லாதது’ ‘அத்தியாவசிய பொருட்கள் என பிரித்து பார்ப்பது தேவையில்லாதது’ ...
தமிழகத்தில் ‘ஜியோ, ஏர்டெல்’ இணைய வேகம் அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 மே
2021
19:45

சென்னை:கூடுதலாக பெறப்பட்ட அலைக்கற்றைகளை தமிழகத்தில் பயன்படுத்துவதன் வாயிலாக, இணைய வேகம் அதிகரித்துள்ளது என, ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

மத்திய தொலைத் தொடர்பு துறை சார்பில், சமீபத்தில் அலைக்கற்றை ஏலம் நடத்தப் பட்டது. இதில், பல்வேறு தொலைத் தொடர்பு நிறுவனங்கள் பங்கேற்று, அலைக்கற்றை ஒதுக்கீட்டை பெற்றனர்.இதில், ரிலையன்ஸ் ஜியோ தொலைத் தொடர்பு நிறுவனம், 850 மெகா ஹெர்ட்ஸ் பேண்டில், 5 மெகா ஹெர்ட்ஸ்; 1800 மெகா ஹெர்ட்ஸ் பேண்டில், 5 மெகா ஹெர்ட்ஸ் மற்றும் 2,300 மெகா ஹெர்ட்ஸ் பேண்டில், 10 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றைகளை பெற்றது.

இதில், தமிழகம் முழுதும் உள்ள, 22 ஆயிரம் தொலைத் தொடர்பு சிக்னல் கோபுரம் அமைவிடங்களில், கூடுதலாக பெற்ற அலைக்கற்றைகளை பயன்படுத்தும் நடவடிக்கையை துவங்கி உள்ளது.மேற்கூறிய மூன்று அலைக்கற்றைகளின் வாயிலாக பயன்பாட்டிற்கு கிடைக்கக் கூடிய மொத்த அலைக்கற்றைகளின் அகலம், 50 சதவீதம் முன்னேற்றம் அடைந்துள்ளது.இதனால், தமிழக ஜியோ வாடிக்கையாளர்கள் இன்டர்நெட்டின் தரவு வேகம் அதிகரிக்கும் என, ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏர்டெல் வேகம் உயர்வு

வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த வலையமைப்பை வழங்க, மத்திய தொலைத் தொடர்புத் துறையின், அலைக்கற்றை ஏலத்தில், 1,800 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றை பேண்டில், 5 மெகாஹெர்ட்ஸ் கூடுதலாக பெற்றுள்ளது. இவை தமிழகத்தில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.இதன் வாயிலாக, தமிழகத்தில் 65 மெகா ஹெர்ட்ஸ் அளவில், மிகப்பெரிய அலைக்கற்றை வங்கியை, ஏர்டெல் கொண்டுள்ளது.

இதனால், நகரங்கள் மட்டுமின்றி, கிராமங்களிலும் உயர்வேக தரவு சேவைகளை, வாடிக்கை யாளர்கள் பெற முடியும் என, பார்தி ஏர்டெல் நிறுவனம் தெரிவித்து உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)