பதிவு செய்த நாள்
26 மே2021
21:29
புதுடில்லி:கொரோனா காலத்தில், அத்தியாவசிய பொருட்கள், அத்தியாவசியமற்ற பொருட்கள் என, பொருட்களை செயற்கையாக பிரித்து பார்ப்பது தேவைஇல்லாதது.
துறையினர், தங்கள் அனைத்து தயாரிப்புகளையும் வீடுகளுக்கு மட்டுமே நேரடியாக, ‘டெலிவரி’ செய்யும் வாய்ப்பை வழங்க வேண்டும் என, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் சார்பில், மத்திய – மாநில அரசுகளிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
எப்.ஐ.எஸ்.எம்.இ., எனும் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின் கூட்டமைப்பு, இது குறித்து தெரிவித்துள்ளதாவது:இந்தியாவில், 6.3 கோடி குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் உள்ளன. இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இத்துறை உள்ளது.ஆனால், இப்போது கொரோனா இரண்டாவது அலையால் மிகவும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது.இந்த சூழலில் மத்திய – மாநில அரசுகள், இத்துறைக்கான ஒரு வழிகாட்டு முறைகளை வெளியிட வேண்டும்.
மேலும், துறையினர், தங்கள் அனைத்து தயாரிப்புகளையும் வீடுகளுக்கு மட்டுமே நேரடியாக டெலிவரி செய்யும் வாய்ப்பை வழங்க வேண்டும். இதன் வாயிலாக பொருளாதார நடவடிக்கைகள் தொடர்வதுடன், வேலைஇழப்புகளும் தவிர்க்கப்படும். மேலும், மாநிலங்களுக்கு இடையேயான சரக்கு போக்குவரத்தையும், ‘இ – பதிவு’ உள்ளிட்ட முன் அனுமதி தேவைகள் இன்றி அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு கூட்டமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|