பதிவு செய்த நாள்
26 மே2021
21:40
புதுடில்லி:நடப்பு ஆண்டில், கிட்டத்தட்ட, 60க்கும் மேற்பட்ட சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள், பங்கு வெளியீட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து, மும்பை பங்குச் சந்தையின், எஸ்.எம்.இ., பிளாட்பாரத்தின் தலைவர் அஜய் தாக்கூர் கூறியதாவது:நடப்பு ஆண்டில், 60க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் நிதி திரட்டிக் கொள்ளும் வகையில், புதிய பங்கு வெளியீட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த ஆண்டில், 16 சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மட்டுமே, புதிய பங்கு வெளியீட்டுக்கு வந்தன.
இவை, இந்த பங்கு வெளியீட்டின் வாயிலாக திரட்டிக் கொண்ட தொகை, 100 கோடி ரூபாயாகும்.சிறிய, நடுத்தர நிறுவனங்கள் தங்களுடைய வளர்ச்சித் தேவைக்கு, பங்கு வெளியீட்டின் வாயிலாக நிதியை திரட்டிக் கொள்வதை, மும்பை பங்குச் சந்தை ஊக்கப்படுத்தி வருகிறது.
நிறுவனங்கள், மும்பை பங்குச் சந்தையின், எஸ்.எம்.இ., பிளாட்பார்மில் பங்குகளை வெளியிட்டு நிதி திரட்டிக்கொள்ளலாம்.கடந்த 2012ல் துவங்கப்பட்ட, எஸ்.எம்.இ., பிளாட்பார்மில் இதுவரை, 337 நிறுவனங்கள் பட்டிய லிடப்பட்டுள்ளன. அவை, 3,500 கோடி ரூபாயை திரட்டியுள்ளன.இவற்றின் மொத்த சந்தை மதிப்பு, 26 ஆயிரத்து, 300 கோடி ரூபாயாகும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|