பதிவு செய்த நாள்
26 மே2021
21:42
மும்பை:கடந்த நிதியாண்டின் மூன்றாவது, நான்காவது காலாண்டில், நிலைமை ஓரளவு சீரடைந்து, வாகன உற்பத்தி அதிகரித்து வந்த நிலையில், அந்த வேகத்தை ஏப்ரல், மே மாத பாதிப்புகள் குறைத்துவிட்டன.
கொரோனா தொற்றின் இரண்டாவது அலை காரண மாக, வாகன உற்பத்தி பெருமளவு சரிவை கண்டுள்ளது.மொத்த வாகன உற்பத்தியில், வர்த்தக வாகனங்கள்தவிர்த்து, பிற வாகன உற்பத்தி, கடந்த ஏப்ரலில், அதற்கு முந்தைய மார்ச் மாதத்துடன் ஒப்பிடும்போது, 21 சதவீதம் அளவுக்கு சரிவை கண்டுள்ளது.இதற்கு பயணியர் வாகன உற்பத்தி, 11 சதவீதமும்; இருசக்கர வாகன உற்பத்தி, 23 சதவீதமும் சரிவை கண்டது முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
மூன்று சக்கர வாகன உற்பத்தி, மார்ச் மாதத்துடன் ஒப்பிடும்போது, கடந்த ஏப்ரலில் 86 சதவீதம் அளவுக்கு சரிவை கண்டுள்ளது என, ‘இந்தியா ரேட்டிங்ஸ்’ அறிக்கை தெரிவித்து உள்ளது.இது குறித்து அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பல நிறுவனங்கள், கொரோனாவை முன்னிட்டு பணி நிறுத்தத்தை மேற்கொண்டன. பராமரிப்பு பணிகள் மட்டுமே நடைபெற்றன.ஏப்ரலில் அதற்கு முந்தைய மாதத்துடன் ஒப்பிடும்போது, பயணியர் வாகனம் மற்றும் இருசக்கர வாகன விற்பனை, 10 சதவீதம் மற்றும் 34 சதவீதம் அளவுக்கு சரிந்துள்ளன. மூன்று சக்கர வாகன விற்பனை, 57 சதவீதம் சரிந்துள்ளது.இருப்பினும், ஏப்ரலில்ஏற்றுமதி அதிகரித்து உள்ளது.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|