உலகின் ‘நம்பர் ஒன்’ பணக்காரர் இடத்தை பிடித்த புதியவர் உலகின் ‘நம்பர் ஒன்’ பணக்காரர் இடத்தை பிடித்த புதியவர் ...  அமேசான் தலைமை பொறுப்பில் இருந்து விலகுகிறார் ஜெப் பேசோஸ் அமேசான் தலைமை பொறுப்பில் இருந்து விலகுகிறார் ஜெப் பேசோஸ் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
வளர்ச்சி கணிப்பை மாற்றவில்லை ரிசர்வ் வங்கி ஆண்டறிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 மே
2021
20:43

மும்பை:கொரோனா தொற்றுநோயின் இரண்டாவது அலையின் தாக்கத்தால், நாட்டின் வளர்ச்சி குறித்த கணிப்பை திருத்த வேண்டிய நிலை ஏற்பட வாய்ப்பிருப்பதாக ரிசர்வ் வங்கியின் ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், ரிசர்வ் வங்கி, நடப்பு நிதியாண்டுக்கான அதன் முந்தைய கணிப்பான, 10.5 சதவீதம் என்ற நிலையை மாற்றவில்லை என்றும்; அதே நிலையை தொடர்வதாகவும் தெரிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கியின், 2020 – 21ம் ஆண்டுக்கான ஆண்டறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:இதற்கு முன் நாட்டின் வளர்ச்சி, 10.5 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போதைய சூழலால் அதை திருத்த வேண்டிய நிலை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

நிதியாண்டில் வளர்ச்சி, 10.5 சதவீதமாகவும்; முதல் காலாண்டில் மைனஸ் 26.1 சதவீதமாகவும்; இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது காலாண்டில் முறையே, 8.3, 5.4, 6.2 சதவீதமாகவும் ஏற்கனவே கணிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது அலையின் மத்தியில் புதிய நிதியாண்டு துவங்கி இருக்கிறது. இருப்பினும் தடுப்பூசிகளின் வரவு உள்ளிட்ட காரணங்களால் நம்பிக்கை அதிகரித்து உள்ளது.

தொற்றுநோயை எதிர்த்து போராடுவதில் தனியாக நின்று போராடும் நாடுகளை விட, உலகளவிலான கூட்டு முயற்சியுடன் போராடும் நாடுகளில் நல்ல வளர்ச்சி ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.சரக்கு மற்றும் சேவை வரி வசூல், தொடர்ச்சியாக ஏழாவது மாதமாக ஏப்ரல் மாதத்திலும், 1 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது. இது தயாரிப்பு மற்றும் சேவை உற்பத்தி சிறப்பாக இருப்பதை உணர்த்துவதாக இருக்கிறது.

பொருளாதாரம் மீண்டும் மீட்சி பாதையில் பயணிக்கும்போது, அரசாங்கம் தெளிவான திட்டங்களை கடைப்பிடிக்க வேண்டும்.மேலும் கூடுதல் நிதி இருப்பு ஆதாரத்தை உருவாக்குவதும் முக்கியம். இது எதிர்கால அதிர்ச்சிகளை சமாளிக்க உதவுவதாக இருக்கும்.இவ்வாறு ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)