பதிவு செய்த நாள்
27 மே2021
20:47
புதுடில்லி:‘இன்போசிஸ்’ நிறுவனத்தின், சி.இ.ஓ., எனும் தலைமை செயல் அதிகாரியான சலீல் பாரேக்கின் சம்பளம், கடந்த நிதியாண்டில், 49.68 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதில் பெருமளவு தொகை, அவருக்கு நிறுவன பங்குகளாக வழங்கப்பட்டுள்ளது.
கடந்த, 2019 – 20ம் நிதியாண்டில், சலீல் பாரேக், 34.27 கோடி ரூபாயை ஊதியமாக பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.நிறுவனத்தின் கடந்த நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், சலீல் பாரேக்குக்கு சம்பளமாக, 6.07 கோடி ரூபாயும்; போனஸ், ஊக்கத்தொகை வாயிலாக, 12.62 கோடி ரூபாயும்; 30.99 கோடி ரூபாய்க்கு பங்குகளாகவும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்போசிஸ் நிறுவனத்தின் தலைவர் நந்தன் நிலேகனி, தனக்கு சம்பளம் எதுவும் தேவையில்லை என தெரிவித்துவிட்டதால், அவருக்கு ஊதியம் வழங்கப்படுவதில்லை. நிறுவனத்தின் தலைமை பணி அதிகாரி யு.பி.பிரவின் ராவ் சம்பளம், கடந்த நிதியாண்டில், 63 சதவீதம் அளவுக்கு அதிகரித்து, 17.33 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
‘டாடா கன்சல்ட்டன்சி சர்வீசஸ்’ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ராஜேஷ் கோபிநாதனுக்கு, டாடா நிறுவனம், 20.36 கோடி ரூபாயை கடந்த நிதியாண்டில், ஊதியமாக வழங்கியிருப்பதும் நினைவு கொள்ள தக்கதாகும்.
மேலும் ஐ.டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|