பதிவு செய்த நாள்
28 மே2021
22:25
புதுடில்லி:சவால்களை தீர்க்கும் வகையில் செயற்கை நுண்ணறிவை, இந்திய அரசும், நிறுவனங்களும் சிறப்பாக பயன்படுத்துவதாக ‘இன்போசிஸ்’ நிறுவனத்தின் இணை நிறுவனரும், ஆதார் கார்டு உருவாக்கத்தில் பெரும்பங்கு வகித்தவருமான நந்தன் நிலேகனி தெரிவித்துள்ளார்.
பணப்பரிவர்த்தனை
மேலும் கூறியுள்ளதாவது:கடந்த சில ஆண்டுகளாக, பணப்பரிவர்த்தனைகளை எவ்வாறு திறமையாக மேற்கொள்வது என்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது. இது ‘டிஜிட்டல்’மயமாக்கத்துக்கு வழிவகுத்து உள்ளது.இந்த டிஜிட்டல்மயமாதல் காரண மாக, மிகப் பெருமளவிலான தரவுகள் உருவாக்கப்படுகின்றன. இந்நிலையில் சுகாதாரம், கல்வி போன்ற துறைகளில் எழும் மிகவும் சவாலான பிரச்னைகளுக்கு, செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவதற்கான சரியான நேரம் இதுவாகும்.
வணிகத் துறையை பொறுத்தவரை, இந்திய நிறுவனங்கள் உலகெங்கிலும் பெரிய அளவிலான சிக்கல்களை தீர்ப்பதற்கு, செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துகின்றன. கொரோனா தொற்றுநோய், டிஜிட்டல் பயன்பாட்டை அதிகரித்த நிலையில், இந்தியாவை செயற்கை நுண்ணறிவு தளத்தில் முதன்மை நிலைக்கு கொண்டுவரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
தனித்துவமிக்க முறை
மிகப் பெரிய செயற்கை நுண்ணறிவு கண்டுபிடிப்புகளில் இந்தியாவும் பங்குகொண்டு இருப்பதாக நான் நினைக்கிறேன்.வணிக தரப்பிலும், அரசாங்கம் மற்றும் நாடு ஆகியவற்றின் தரப்பிலும், இந்தியா அதன் சவால்களுக்கு செயற்கை நுண்ணறிவை தனித்துவமிக்க முறையில் பயன்படுத்த வாய்ப்புகளை பெற்றிருக்கிறது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|