பதிவு செய்த நாள்
28 மே2021
22:27
புதுடில்லி:நடப்பு நிதியாண்டில், நாட்டில் உள்ள, ஆறு முக்கியமான நகரங்களில், வீடுகள் விற்பனை, 5 – 10 சதவீதம் அளவுக்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக, தர நிர்ணய நிறுவனமான ‘கிரிசில்’ தெரிவித்துள்ளது.
விற்பனை சற்று அதிகரித்தாலும், வீடுகளுக்கான தேவை, கொரோனாவுக்கு முந்தைய காலகட்ட நிலைக்கு திரும்ப, இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆகும் என்றும், கிரிசில் குறிப்பிட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது:விலை குறைந்து வருவது, வீட்டிலிருந்து பணிபுரியும் போக்கு தொடர்வது போன்ற காரணங்களால், நடப்பு நிதியாண்டில், முக்கியமான ஆறு நகரங்களில் விற்பனை, 5- – 10 சதவீதம் அளவுக்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்.
இருப்பினும், கொரோனாவுக்கு முந்தைய காலகட்டத்தில் இருந்த தேவையை மீண்டும் எட்டுவதற்கு, 2023ம் நிதியாண்டு வரை ஆகும்.நடப்பு நிதியாண்டின்முதல் பாதியில், கொரோனா பாதிப்புகள் காரணமாக தேவை குறைந்தாலும், இரண்டாவது அரையாண்டில் மீட்சி காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறைந்த வட்டி விகிதம், விலை திருத்தம் போன்ற காரணங்களால், ஐந்து ஆண்டுகளில் 30 சதவீதம் வரை வாங்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|