பதிவு செய்த நாள்
28 மே2021
22:29
புதுடில்லி:‘இன்போசிஸ்’ நிறுவனத்தின் இணை நிறுவனர் எஸ்.டி. ஷிபுலால், மீண்டும், 100 கோடி ரூபாய் மதிப்பிலான இன்போசிஸ் நிறுவனத்தின் பங்குகளை வாங்கி இருக்கிறார்.
இதற்கு முன் கடந்த 12ம் தேதி, 100 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை ஷிபுலால் வாங்கியிருந்தார். அதன் பின் மீண்டும் 19ம் தேதியன்று, 100 கோடி ரூபாய்க்கு வாங்கினார். இப்போது மீண்டும், 100 கோடி ரூபாய் மதிப்பிலான இன்போசிஸ் பங்குகளை வாங்கி உள்ளார். பங்குகளை அவரது மனைவி குமாரி ஷிபுலாலிடமிருந்து வாங்கி உள்ளார். இவரிடமிருந்து 7.23 லட்சம் பங்குகளை வாங்கியுள்ளார். இது 0.02 சதவீதம்.
இதையடுத்து, ஷிபுலால் வசம் உள்ள இன்போசிஸ் நிறுவனத்தின் பங்குகள், 0.12 சதவீதமாக அதிகரித்து உள்ளன. குமாரி ஷிபுலால் வசம் 0.14 சதவீத பங்குகள் உள்ளன.பங்குகள் வாங்கிய விபரத்தை, அவர் ஒழுங்குமுறை அமைப்புகளுக்கு தெரிவித்துள்ளார்.
மேலும் ஐ.டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|