பதிவு செய்த நாள்
29 மே2021
19:33

புதுடில்லி:இந்தியாவில் அதிக அளவிலான அன்னிய நேரடி முதலீடுகளை மேற்கொள்ளும் நாடுகள் வரிசையில், இதுவரை, இரண்டாவது இடத்தில் இருந்த மொரீஷியஸ் நாட்டை பின்னுக்கு தள்ளி, அந்த இடத்தை பிடித்துள்ளது, அமெரிக்கா.
தொடர்ந்து மூன்றாவது நிதியாண்டாக, முதலிடத்தை சிங்கப்பூர் வகித்து வருகிறது. சிங்கப்பூரிலிருந்து கடந்த நிதியாண்டில் மட்டும், 1.27 லட்சம் கோடி ரூபாய் அன்னிய நேரடி முதலீடாக பெறப்பட்டு உள்ளது.அமெரிக்காவிலிருந்து கடந்த நிதியாண்டில், 1.08 லட்சம் கோடி ரூபாய் முதலீடு வந்துள்ளது. மொரீஷியஸ் நாட்டிலிருந்து, 41 ஆயிரத்து, 172 கோடி ரூபாய் முதலீடு பெறப்பட்டுள்ளது.
இவற்றை அடுத்து, ஐக்கிய அரபு நாடுகள், கேமேன் தீவுகள், நெதர்லாந்து, பிரிட்டன், ஜப்பான், ஜெர்மனி மற்றும் சைப்ரஸ் ஆகிய நாடுகளிலிருந்து அதிகளவில் முதலீடுகள் பெறப்பட்டு உள்ளன.அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக, கடந்த நிதியாண்டில் மட்டும், அன்னிய நேரடி முதலீடு, 19 சதவீதம் அளவுக்கு அதிகரித்து உள்ளது.நடப்பு நிதியாண்டிலும் அன்னிய நேரடி முதலீடு வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|