வருவாய் வறட்சியில் தவிக்கும் குளிர்பான தயாரிப்பு நிறுவனங்கள் வருவாய் வறட்சியில் தவிக்கும் குளிர்பான தயாரிப்பு நிறுவனங்கள் ...  உங்கள் ‘டிஜிட்டல்’ பாதுகாப்பை உறுதி செய்வதற்கான வழிகள் உங்கள் ‘டிஜிட்டல்’ பாதுகாப்பை உறுதி செய்வதற்கான வழிகள் ...
சைக்கிள் தயாரிப்புத்துறை 20 சதவீதம் வளர்ச்சி காணும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 மே
2021
20:03

மும்பை:நடப்பு நிதியாண்டில், நாட்டின் சைக்கிள் தயாரிப்பு துறை, கடந்த, 10 ஆண்டுகளில் காணாத வகையில், 20 சதவீதம் அளவுக்கு வளர்ச்சி காணும் என, தர நிர்ணய நிறுவனமான, ‘கிரிசில்’ தெரிவித்துள்ளது.

மேலும், கடந்த நிதியாண்டில், 1.2 கோடி சைக்கிள்கள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், நடப்பு நிதியாண்டில் விற்பனை, 1.45 கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:இந்தியா, சைக்கிள் உற்பத்தியில் உலகளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது. ‘ஸ்டாண்டர்டு, பிரீமியம், கிட்ஸ், எக்ஸ்போர்ட்’ என, நான்கு வகைகளில் தயாரிக்கப்படுகிறது.சைக்கிளுக்கான தேவையில் பெரும்பகுதி, அரசின் நலத்திட்டங்கள் அடிப்படையில் பெறப்படுவதாகும்.

கடந்த ஆண்டு விற்பனையில் பாதியளவு, அரசாங்க திட்டங்களுக்காக விற்பனை செய்யப் பட்டதாகும்.சைக்கிள் உற்பத்தியில், 40 சதவீதம், பிரீமியம் மற்றும் குழந்தைகளுக்கான தாகும். 10 சதவீதம் ஏற்றுமதி ஆகிறது.கொரோனா பாதிப்பின் காரணமாக, உடலை தகுதிவாய்ந்ததாக வைத்துக்கொள்ள பலரும் விரும்புவதை அடுத்து, சைக்கிளுக்கான தேவையும் அதிகரித்துள்ளது.

கடந்த நிதியாண்டில், ஊரடங்கு போன்றவற்றால் உற்பத்தி பாதிக்கப்பட்டது. மேலும் அரசாங்கங்கள் வாங்குவதும் குறைந்தது.தற்போதும் ஊரடங்கால் பாதிக்கப்பட்டிருப்பினும், அவை நீக்கப்பட்டு, விற்பனையகங்கள் மீண்டும் செயல்படத் துவங்கியதும், விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)