சைக்கிள் தயாரிப்புத்துறை 20 சதவீதம் வளர்ச்சி காணும் சைக்கிள் தயாரிப்புத்துறை 20 சதவீதம் வளர்ச்சி காணும் ...  கல்விக் கடன் தர மறுத்தால்  என்ன செய்வது? ஆயிரம் சந்தேகங்கள் கல்விக் கடன் தர மறுத்தால் என்ன செய்வது? ஆயிரம் சந்தேகங்கள் ...
உங்கள் ‘டிஜிட்டல்’ பாதுகாப்பை உறுதி செய்வதற்கான வழிகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 மே
2021
19:18

நிதி மோசடி எல்லா காலத்திலும் உண்டு என்றால், ‘டிஜிட்டல்’ யுகத்தில் இது சைபர் வடிவம் எடுத்திருக்கிறது. அதிலும், கொரோனா சூழலில் பலரும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை நாடி வரும் நிலையில், சைபர் குற்றவாளிகள் மோசடி வலை விரிப்பதும் அதிகரித்திருக்கிறது. கார்டு மோசடி முதல், அடையாள திருட்டு வரை பல விதங்களில் சைபர் குற்றவாளிகள் வலை விரிக்கின்றனர். எனவே, ‘ஆன்லைன்’ பரிவர்த்தனையை மேற்கொள்ளும் போது, பணத்தின் டிஜிட்டல் பாதுகாப்பை உறுதி செய்து கொள்வது அவசியம். அதற்கான வழிமுறைகளை பார்க்கலாம்.


‘பாஸ்வேர்டு’ பாதுகாப்பு:


பெரும்பாலான பரிவர்த்தனைகளுக்கு, ஓ.டி.பி., எனும் ஒரு முறை ‘பாஸ்வேர்டு’ அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த பாஸ்வேர்டை எக்காரணம் கொண்டும் யாருடனும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். இந்த பாஸ்வேர்டு உங்களுக்கானது மட்டுமே. இதே போல, அறிமுகம் இல்லாத இடங்களில் கியூ.ஆர்., கோடை ‘ஸ்கேன்’ செய்ய வேண்டாம்.


‘இ – மெயில்’ வலை:


வங்கி போன்ற அமைப்புகளிடம் இருந்து வருவது போன்ற தோற்றத்துடன் அனுப்பி வைக்கப்படும் ‘இ – மெயில்’கள் மூலம் மோசடி வலை விரிக்கப்படுகிறது. இது போன்ற மெயில்களில் சுட்டிக்காட்டப்படும் இணைப்புகளை ‘கிளிக்’ செய்ய வேண்டாம். அவை, மோசடி தளங்களுக்கு அழைத்துச் செல்லலாம்.

‘கார்டு’ தகவல்கள்:


இணைய பரிவர்த்தனைகளுக்கு ‘டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு’ பயன்படுத்தும் போது, தொடர்புடைய தகவல்களை இணையதளங்களில் சேமிக்க வேண்டாம். ஒவ்வொரு முறையும் நீங்களே புதிதாக தகவல்களை உள்ளீடு செய்யுங்கள். இதன் மூலம் தகவல்கள் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும்.


உங்கள் சாதனம்:


நீங்கள் பயன்படுத்தும் ‘கம்ப்யூட்டர் அல்லது ஸ்மார்ட் போன்’ பாதுகாப்பில் கவனம் செலுத்துங்கள். இவற்றில் வைரஸ் தடுப்பு மென்பொருள் வசதியை நிறுவுங்கள். இவற்றுக்கான ‘அப்டேட்’களையும் நிறுவுங்கள். ‘ஹேக்கர்’கள் நுழைவதற்கான கதவுகளை மூடி வைத்திருக்கவும்.

அடையாள திருட்டு:



இணையத்தில் கிடைக்கும் உங்களை பற்றிய தகவல்களை திரட்டி, உங்கள் பெயரில் மோசடியாளர்கள் ஏமாற்றலாம். எனவே, இணையத்தில் குறிப்பாக சமூக ஊடகங்களில் பகிரும் தகவல்களில் கவனம் தேவை. புகைப்படம், தனிப்பட்ட தகவல்களை பகிராமல் இருப்பது நல்லது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)