பதிவு செய்த நாள்
03 ஜூன்2021
20:24
புதுடில்லி:மத்திய அரசு, விரைவில் வாகன பாகங்கள் தயாரிப்பு நிறுவனங்கள், உருக்கு, ஜவுளி ஆகிய துறைகளுக்கு, உற்பத்தியுடன் இணைந்த ஊக்கச்சலுகை திட்டமான, பி.எல்.ஐ., திட்டத்தை அறிவிக்க உள்ளது.
உள்நாட்டு தயாரிப்பை ஊக்கப்படுத்தும் வகையில், இந்த பி.எல்.ஐ., திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.இந்நிலையில், இந்த திட்டத்தில் மேலும் சில துறைகள் சேர்க்கப்பட உள்ளன.இது குறித்து தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டு துறையின் கூடுதல் செயலர் சுமிதா தவ்ரா கூறியதாவது:
மேம்பட்ட தொழில்நுட்பங்களை ஈர்ப்பது, பொருளாதாரத்தை மேம்படுத்துவது, தரத்தை அதிகரிப்பது போன்ற காரணங்களுக்காக, பி.எல்.ஐ., திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. கடுமையான காலக்கெடுவுடன் நாங்கள் இந்த திட்டத்தை முன்னெடுத்து செல்கிறோம். இப்போது உருக்கு, ஜவுளி, வாகன பாகங்கள் ஆகிய துறைகளுக்கும் இந்த திட்டத்தை அறிமுகம் செய்ய இருக்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
மத்திய அரசு இதுவரை, 13 துறைகளுக்கு இந்த பி.எல்.ஐ., திட்டத்தை அறிமுகம் செய்து உள்ளது குறிப்பிடத்தக்கது.இந்த திட்டத்தின் மூலம், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை அதிகளவில் ஈர்க்க முடியும்.
மேலும் ஜவுளி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|