பதிவு செய்த நாள்
03 ஜூன்2021
20:26
மும்பை:வரலாற்றில் முதல் முறையாக, ‘விப்ரோ’ நிறுவனத்தின் சந்தை மதிப்பு, நேற்று, 3 லட்சம் கோடி ரூபாய் என்ற உயரத்தை எட்டியது.இதையடுத்து இந்தியாவில், 3 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பு கொண்ட, மூன்றாவது தகவல் தொழில்நுட்ப நிறுவனமாக விப்ரோ உயர்ந்து உள்ளது.
மூன்று லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பு கொண்ட மற்ற இரு நிறுவனங்கள், ‘டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் மற்றும் இன்போசிஸ்’ ஆகியவை ஆகும்.நேற்றைய வர்த்தகத்தின் துவக்கத்தில், விப்ரோ நிறுவனத்தின் பங்குகள் விலை, 1.27 சதவீதம் அதிகரித்து, 550 ரூபாயை தொட்டது.இதையடுத்து நிறுவனத்தின் சந்தை மதிப்பு, 3.01 லட்சம்கோடி ரூபாயாக உயர்ந்தது.
விப்ரோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக திய்ரி டெலாபோர்டே இணைந்தது, நிறுவன பங்குகள் விலை அதிகரிக்க முக்கிய காரணமாக அமைந்ததாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.மேலும், இந்நிறுவனம் இதுவரை இல்லாத வகையில், ஜெர்மனியிலிருந்து, ‘மெட்ரோ’ நிறுவனத்தின் வாயிலாக, 51 ஆயிரத்து 830 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தம் பெறப்பட்டுள்ளது.இதுவும் பங்கு விலை அதிகரிக்க காரணமாக அமைந்தது.
இந்தியாவில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் மொத்தம் 13 நிறுவனங்கள், 3 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான சந்தை மதிப்பை கொண்டு உள்ளன.இப்போது அந்த வரிசையில், 14வது நிறுவனமாக விப்ரோவும் இணைந்துள்ளது.
மேலும் ஐ.டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|