பதிவு செய்த நாள்
04 ஜூன்2021
19:01
புதுடில்லி:கொரோனா பாதிப்புகள் குறைந்து வருவது மற்றும் தடுப்பூசிகள் போடுவது அதிகரித்து வருவது போன்ற காரணங்களால் எலக்ட்ரானிக், மொபைல், வாகனங்கள் ஆகிய துறைகளில் உற்பத்தி அதிகரிக்கப்பட்டு வருகிறது.
கடந்த சில வாரங்களாக, உற்பத்தி மிகவும் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த வாரத்தில் இருந்து மீண்டும் உற்பத்தி அதிகரித்து வருகிறது.கொரோனா தொற்று அதிகரிக்கவும், துவக்கத்தில் பல நிறுவனங்கள் தங்கள் ஆலைகளில் பணி நிறுத்தத்தை மேற்கொண்டு, பராமரிப்பு பணிகளுக்காக இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டன.
இந்நிலையில், இப்போது மீண்டும் அவை செயல்பட துவங்கி இருக்கின்றன.‘எல்.ஜி., சாம்சங், கோத்ரெஜ் அப்ளையன்சஸ், விவோ, ஒப்போ, பானாசோனிக்’ என பல நிறுவனங்கள் உற்பத்தியை மீண்டும் துவங்கி இருக்கின்றன.மே மாதத்தில் பல ஆலைகள் இயங்கினாலும், உற்பத்தி 30 – 40 சதவீதமாக குறைந்து இருந்தது. மேலும் கடைகள் திறக்காததால், தேவையும் குறைந்துவிட்டது. இதன் காரணமாகவும் அதிகளவில் உற்பத்தி செய்ய இயலவில்லை. ஜூலையில் உற்பத்தி நிலைமை சரியாகும் என எதிர்பார்ப்பதாக, தொழில்துறையினர் தெரிவித்து உள்ளனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|