பதிவு செய்த நாள்
05 ஜூன்2021
19:35
மும்பை:தொலைத்தொடர்பு துறைக்காக ,12 ஆயிரத்து 195 கோடி ரூபாய் மதிப்பிலான பி.எல்.ஐ., எனும், உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது; இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
குறித்து இத்துறையின் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பது, இறக்குமதி சார்புநிலையை குறைப்பது, மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவது ஆகியவையே, இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். தொழில் துறையினருடனான விரிவான ஆலோசனையின் பிறகே, இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதில், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறையினருடைய ஆலோசனைகளும் கேட்கப்பட்டன.
தற்போது, இத்துறைக்கான பி.எல்.ஐ., திட்டத்துக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. நெட்வொர்க் உபகரணங்கள், ரூட்டர்ஸ், பிராட்பேண்ட் டிரான்ஸ்மிஷன் உபகரணங்கள், 5ஜி உபகரணங்கள் மற்றும் ஆப்டிகல் பைபர் இணைப்புகள் வழங்குவதற்கு தேவையான மின்னணு பொருட்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்வதற்கான ஊக்கத்தை இத்திட்டம் வழங்கும்.
நோக்கியா, எச்.எப்.சி.எல்., ஆகிய நிறுவனங்களும், தற்போது இந்த திட்டத்தில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளன. சாம்சங் ஏற்கனவே விருப்பத்தை தெரிவித்து உள்ளது. இத் துறையில், இத்திட்டம், 3 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டை கொண்டு வரும் என்றும்; 17 ஆயிரம் கோடி ரூபாய் வரி வருவாயை தரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|