பதிவு செய்த நாள்
05 ஜூன்2021
19:46
புதுடில்லி:தொற்றுநோயின் தாக்கத்திலிருந்து பொருளாதாரம் புத்துயிர் பெற, மாநிலங்கள் முழுதும், முறையான சில்லரை விற்பனை நிலையங்கள், மால்கள் மற்றும் ஷாப்பிங் சென்டர்களை கட்டுப்பாடுகளுடன் மீண்டும் திறக்க அனுமதிக்க வேண்டும் என்று இந்திய சில்லரை விற்பனையாளர்கள் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும், பொருளாதார மறுமலர்ச்சி என்பது, சில்லரை வணிகங்களின் மறுமலர்ச்சியுடன் இணைந்ததாகும். குறிப்பாக, பெரிய சில்லரை விற்பனையகங்கள் நுகர்வுக்கு உந்துதலாக இருக்கின்றன என்றும் சங்கம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சங்கத்தின் தலைமை செயல் அதிகாரி குமார் ராஜகோபாலன் கூறியதாவது: ஹரியானா மாநிலத்தில், ஏற்கனவே கட்டுப்பாடுகளுடன் மால்களை திறந்துள்ளனர். காலை, 10 மணி முதல், 6 மணி வரை செயல்படலாம் என்றும்; 25 சதுர அடிக்கு ஒரு நபர் என்ற அடிப்படையில் நுகர்வோரை அனுமதிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது ஒரு நல்ல முடிவு.
இத்தகைய கட்டுப்பாடுகளுடன் திறப்பதால், ஆயிரக்கணக்கான ஊழியர்கள் வாழ்வாதாரம் காக்கப்படும். பொருளாதாரத்தை மீட்சியடைய வைக்கும் வகையில், மற்ற மாநிலங்களும் இதே போன்ற நடைமுறையை பின்பற்ற வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|