ஆயிரம்e சந்தேகங்கள்: கடனை கட்டியதற்கு  சான்றிதழ் வாங்கணுமா?ஆயிரம்e சந்தேகங்கள்: கடனை கட்டியதற்கு சான்றிதழ் வாங்கணுமா? ...  ‘விஜயா டயக்னாஸ்டிக்’ நிறுவனம் பங்கு வெளியீட்டுக்கு விண்ணப்பம் ‘விஜயா டயக்னாஸ்டிக்’ நிறுவனம் பங்கு வெளியீட்டுக்கு விண்ணப்பம் ...
வங்கிகள் தனியார்மயம் தேர்வான இரு வங்கிகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஜூன்
2021
04:40

புதுடில்லி : பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் முயற்சியில், முதல் கட்டமாக இரண்டு வங்கிகளில் மத்திய அரசு பங்கு விலக்கலை மேற்கொள்ள முடிவு செய்துள்ளது.

இந்நிலையில், ‘சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, இந்தியன் ஓவர்சீஸ் பேங்க்’ ஆகிய இரு வங்கிகளில் பங்கு விலக்கலை மேற்கொள்ள, அரசு முடிவு செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. ‘நிடி ஆயோக்’ அமைப்பு முதல் கட்டமாக, இந்த இரு வங்கிகளையும் தனியார்மயமாக்கலாம் என ஆலோசனை தெரிவித்து உள்ளதாக செய்திகள் வருகின்றன. இருப்பினும் சில தரப்பில், ‘பேங்க் ஆப் இந்தியா’ பட்டியலில் இருப்பதாக சொல்கிறார்கள். மத்திய பங்கு விலக்கல் துறை மற்றும் நிதி சேவைகள் துறை ஆகிய இரண்டு துறைகளும், ‘நிடி ஆயோக்’ கொடுத்திருக்கும் பட்டியல் குறித்து பரிசீலித்து வருகின்றன.

வங்கிகளை தனியார்மயமாக்குவதற்கு முன்பாக, பல கட்டங்களில் இது போன்ற ஆலோசனைகளும், பரிந்துரைகளும் மேற்கொள்ளப்படும்.‘நிடி ஆயோக்’ பரிந்துரையின் பேரில், பல துறைகளின் அமைச்சகங்களில் இது குறித்து பரிசீலனை செய்து, அடுத்த கட்டமாக மத்திய அமைச்சர்கள் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்படும்.இறுதியாக மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கும்.இறுதி முடிவு எடுக்கும் முன், ரிசர்வ் வங்கி யிடமும் ஆலோசனை கோரப்படும்.

அண்மையில் மத்திய அரசு, ஐ.டி.பி.ஐ., வங்கியின் பங்குகளை விற்பனை செய்ய அனுமதி வழங்கி இருக்கிறது.நடப்பு நிதியாண்டிற்குள்ளாக, இவ்வங்கியின் பங்குகளை அரசு விற்று முடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)