பதிவு செய்த நாள்
08 ஜூன்2021
04:40
புதுடில்லி : பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் முயற்சியில், முதல் கட்டமாக இரண்டு வங்கிகளில் மத்திய அரசு பங்கு விலக்கலை மேற்கொள்ள முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், ‘சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, இந்தியன் ஓவர்சீஸ் பேங்க்’ ஆகிய இரு வங்கிகளில் பங்கு விலக்கலை மேற்கொள்ள, அரசு முடிவு செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. ‘நிடி ஆயோக்’ அமைப்பு முதல் கட்டமாக, இந்த இரு வங்கிகளையும் தனியார்மயமாக்கலாம் என ஆலோசனை தெரிவித்து உள்ளதாக செய்திகள் வருகின்றன. இருப்பினும் சில தரப்பில், ‘பேங்க் ஆப் இந்தியா’ பட்டியலில் இருப்பதாக சொல்கிறார்கள். மத்திய பங்கு விலக்கல் துறை மற்றும் நிதி சேவைகள் துறை ஆகிய இரண்டு துறைகளும், ‘நிடி ஆயோக்’ கொடுத்திருக்கும் பட்டியல் குறித்து பரிசீலித்து வருகின்றன.
வங்கிகளை தனியார்மயமாக்குவதற்கு முன்பாக, பல கட்டங்களில் இது போன்ற ஆலோசனைகளும், பரிந்துரைகளும் மேற்கொள்ளப்படும்.‘நிடி ஆயோக்’ பரிந்துரையின் பேரில், பல துறைகளின் அமைச்சகங்களில் இது குறித்து பரிசீலனை செய்து, அடுத்த கட்டமாக மத்திய அமைச்சர்கள் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்படும்.இறுதியாக மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கும்.இறுதி முடிவு எடுக்கும் முன், ரிசர்வ் வங்கி யிடமும் ஆலோசனை கோரப்படும்.
அண்மையில் மத்திய அரசு, ஐ.டி.பி.ஐ., வங்கியின் பங்குகளை விற்பனை செய்ய அனுமதி வழங்கி இருக்கிறது.நடப்பு நிதியாண்டிற்குள்ளாக, இவ்வங்கியின் பங்குகளை அரசு விற்று முடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|