பதிவு செய்த நாள்
08 ஜூன்2021
04:41
புதுடில்லி : நுகர்பொருள் விற்பனையில் முன்னணி நிறுவனமான, ‘ரெக்கிட்’ அதன் பிரபலமான பிராண்டான, ‘டெட்டால்’ தயாரிப்பில், அதன் ‘லோகோ’ படத்துக்கு பதிலாக, கோவிட் பாதுகாவலர்களின் படங்களை பிரசுரிக்க இருப்பதாக தெரிவித்துள்ளது.
அவர்களின் படத்தை பிரசுரிப்பதுடன் மட்டுமின்றி; அவர்கள் ஆற்றிய சாதனை குறித்த தகவலையும் வெளியிட உள்ளது. ‘டெட்டால் சல்யூட்ஸ்’ எனும் இந்த பிரசாரத்தில், ‘டெட்டால் ஹேண்ட் வாஷ்’ பேக்குகளில், நாடு முழுக்க உள்ள கோவிட் போராளிகளில், 100 பேர்களின் ஊக்கமளிக்கும் கதைகளை பிரசுரிக்க உள்ளது. இவர்கள் அனைவரும் தொற்று நோய் காலத்தில், எண்ணற்ற மக்களுக்கு உதவியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.வரலாற்றின் முதல் முறையாக, ‘டெட்டால்’ அதன் லோகோவை நீக்கிவிட்டு, அதற்கு பதில், கோவிட் போராளிகள் படங்களை பிரசுரிக்கிறது.
அத்துடன், எழுச்சியூட்டும் அவர்களின் கதைகளும் பிரசுரிக்கப்படுகிறது.இந்த, ‘டெட்டால் சல்யூட்ஸ்’ பேக்குகள் மின்னணு வர்த்தக நிறுவனங்களின் வாயிலாகவும்; நாட்டில் உள்ள, 5 லட்சம் ஸ்டோர்கள் வாயிலாகவும் விற்பனைக்கு வருகிறது. ஜூன் மூன்றாவது வாரத்திலிருந்து இவை கிடைக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|