பதிவு செய்த நாள்
08 ஜூன்2021
04:42
மும்பை : கடந்த ஆண்டு ஏப்ரலில் இருந்து ஒவ்வொரு மாதமும், நாட்டில் சராசரியாக 13 லட்சம் புதிய டீமேட் கணக்குகள் துவங்கப்படுகின்றன.
கொரோனா தொற்று நோயால், கடந்த நிதியாண்டே பாதிப்புக்கு உள்ளாகியது. இருந்தபோதும், பங்குச் சந்தைகள் புதிய புதிய சாதனை உயரங்களை தொட்டன.6.97 கோடி ரூபாய்இதன் தொடர்ச்சியாக கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஒவ்வொரு மாதமும் சராசரியாக 13 லட்சம் புதிய டீமேட் கணக்குகளை பங்குச் சந்தை தரகர்கள் சேர்த்துஉள்ளனர்.இதனையடுத்து ஒட்டுமொத்த சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை, நடப்பு ஆண்டு மே இறுதி நிலவரப்படி 6.97 கோடியாக உயர்ந்துள்ளது.டீமேட் கணக்கு என்பது, மின்னணு வடிவில் பங்குகளை இருப்பு வைத்துக் கொள்வதற்கான கணக்கு ஆகும்.
நமது நாட்டில், பங்குச் சந்தைகள் வாயிலாக பங்குகளை வாங்கவோ அல்லது விற்கவோ வேண்டுமென்றால் இந்த டீமேட் கணக்கு கட்டாயமாகும்.நான்காவது இடம்நாட்டில் உள்ள மொத்த டீமேட் கணக்குகளில் கால்வாசி பகுதி கணக்குகள், மஹாராஷ்ட்ரா மாநிலத்தை சேர்ந்தவையாகும். இதனையடுத்து, குஜராத் மாநிலம் 85.9 லட்சம் கணக்குகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. மூன்றாவது இடத்தில், உத்தரபிரதேசம் உள்ளது. நான்காவது இடத்தில் தமிழ்நாடு உள்ளது. 42.3 லட்சம் கணக்குகள், தமிழ்நாட்டை சேர்ந்தவை ஆகும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|