பங்குச் சந்தைகள் புதிய சாதனை பங்குச் சந்தைகள் புதிய சாதனை ... கேஷ்ப்ரீ டிஜிட்டல் பேமெண்ட்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்கிறது எஸ்.பி.ஐ. கேஷ்ப்ரீ டிஜிட்டல் பேமெண்ட்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்கிறது எஸ்.பி.ஐ. ...
திருப்பூரில் ஏற்றுமதி நிறுவனங்கள் மீண்டும் இயங்க துவங்கின
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஜூன்
2021
04:44

திருப்பூர் : திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்கள் நேற்று முதல் மீண்டும் இயங்க துவங்கியுள்ளன.
ஊரடங்கால், கடந்த மூன்று வாரமாக, திருப்பூரில், ஏற்றுமதி ஆடை உற்பத்தி நிறுவனங்கள் இயங்கவில்லை. ஆக்சிஜன் அளவுதளர்வு அளிக்கப்பட்டதையடுத்து, இந்நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதி சார்ந்த நிட்டிங், பிரின்டிங், எம்ப்ராய்டரி என, ‘ஜாப்ஒர்க்’ நிறுவனங்கள், நேற்று முதல் மீண்டும் இயங்க துவக்கியுள்ளன.தொழிலாளருக்கு நிறுவன நுழைவாயிலி லேயே உடல் வெப்பநிலை, ஆக்சிஜன் அளவு பரிசோதிக்கப்படுகிறது. போலீஸ், மாநகராட்சி, வருவாய் துறை அதிகாரிகள், ஏற்றுமதி ஆடை உற்பத்தி நிறுவனங்களில் நேரடி ஆய்வு நடத்துகின்றனர்.

நிறுவனங்களின் இயக்கத்தை புகைப்படம்; வீடியோவாக பதிவு செய்கின்றனர்.திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம் கூறியதாவது:அமெரிக்கா, ஐரோப்பா போன்ற வெளிநாட்டு வர்த்தகர்களிடம் இருந்து, வரும் 2022ம் ஆண்டின் கோடை காலத்துக்கான ஆடை தயாரிப்புக்கு ஆர்டர்கள் வந்து கொண்டிருக்கின்றன. தடுப்பூசிதிருப்பூரில் உற்பத்தி நிறுத்தப் பட்டதால், ஆர்டர்கள் கைநழுவும் நிலை உருவானது. தற்போது, ஆர்டரை பெறும் நோக்கில், ‘சாம்பிள்’ ஆடை தயாரிப்பு நடக்கிறது.பல நிறுவனங்களில், 10 சதவீத தொழிலாளர் கூட இல்லாத நிலை உள்ளது. தொழிலாளருக்கு தடுப்பூசி செலுத்துவதை அரசு வேகப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)