பதிவு செய்த நாள்
08 ஜூன்2021
04:44
திருப்பூர் : திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்கள் நேற்று முதல் மீண்டும் இயங்க துவங்கியுள்ளன.
ஊரடங்கால், கடந்த மூன்று வாரமாக, திருப்பூரில், ஏற்றுமதி ஆடை உற்பத்தி நிறுவனங்கள் இயங்கவில்லை. ஆக்சிஜன் அளவுதளர்வு அளிக்கப்பட்டதையடுத்து, இந்நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதி சார்ந்த நிட்டிங், பிரின்டிங், எம்ப்ராய்டரி என, ‘ஜாப்ஒர்க்’ நிறுவனங்கள், நேற்று முதல் மீண்டும் இயங்க துவக்கியுள்ளன.தொழிலாளருக்கு நிறுவன நுழைவாயிலி லேயே உடல் வெப்பநிலை, ஆக்சிஜன் அளவு பரிசோதிக்கப்படுகிறது. போலீஸ், மாநகராட்சி, வருவாய் துறை அதிகாரிகள், ஏற்றுமதி ஆடை உற்பத்தி நிறுவனங்களில் நேரடி ஆய்வு நடத்துகின்றனர்.
நிறுவனங்களின் இயக்கத்தை புகைப்படம்; வீடியோவாக பதிவு செய்கின்றனர்.திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம் கூறியதாவது:அமெரிக்கா, ஐரோப்பா போன்ற வெளிநாட்டு வர்த்தகர்களிடம் இருந்து, வரும் 2022ம் ஆண்டின் கோடை காலத்துக்கான ஆடை தயாரிப்புக்கு ஆர்டர்கள் வந்து கொண்டிருக்கின்றன. தடுப்பூசிதிருப்பூரில் உற்பத்தி நிறுத்தப் பட்டதால், ஆர்டர்கள் கைநழுவும் நிலை உருவானது. தற்போது, ஆர்டரை பெறும் நோக்கில், ‘சாம்பிள்’ ஆடை தயாரிப்பு நடக்கிறது.பல நிறுவனங்களில், 10 சதவீத தொழிலாளர் கூட இல்லாத நிலை உள்ளது. தொழிலாளருக்கு தடுப்பூசி செலுத்துவதை அரசு வேகப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|