பதிவு செய்த நாள்
08 ஜூன்2021
21:15
புதுடில்லி:பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் முயற்சியில் முதற்கட்டமாக, இரண்டு வங்கிகள் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வருகின்றன.
இந்நிலையில், அந்த வங்கிகள் தனியார்மயமாக்கப்படும்போது, கவர்ச்சிகரமான விருப்ப ஓய்வு திட்டமும் அறிவிக்கப்படும் என தகவல்கள் வருகின்றன.கடந்த பிப்ரவரி முதல் தேதியன்று, பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2021 – 22ம் நிதியாண்டில் இரண்டு வங்கிகள், ஒரு பொது காப்பீட்டு நிறுவனம் ஆகியவை தனியார் மயமாக்கப்படும் என அறிவித்தார்.
இதையடுத்து, ‘நிடி ஆயோக்’ நிறுவனம், இரு வங்கிகளின் பெயரை பரிந்துரைத்துள்ளது. இந்த வங்கிகளை தனியார்மயமாக்க வசதியாக, அவ்வங்கிகளின் ஊழியர்களுக்கு கவர்ச்சிகரமான விருப்ப ஓய்வு திட்டமும் அறிவிக்கப்படும் என தெரிகிறது. இதனால் தனியார் முதலீட்டாளர்கள், வங்கிகளை கையகப்படுத்துவது எளிதாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.
‘சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, இந்தியன் ஓவர்சீஸ் பேங்க், பேங்க் ஆப் மஹாராஷ்டிரா, பேங்க் ஆப் இந்தியா’ ஆகிய வங்கிகளின் பெயர்கள் முதற்கட்ட தனியார்மயமாக்கத்துக்கு பரிந்துரைக்கப்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|