அதிகரிக்கும் மின் நுகர்வு மீட்சி காணும் பொருளாதாரம் அதிகரிக்கும் மின் நுகர்வு மீட்சி காணும் பொருளாதாரம் ...  இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி உலக வங்கியின் கணிப்பு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி உலக வங்கியின் கணிப்பு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
வாராக் கடன் வங்கிக்கு கடன்களை மாற்ற தயார்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஜூன்
2021
21:19

கோல்கட்டா:வங்கிகளின் வாராக் கடன் விவகாரத்தில், முதல் கட்டமாக, 89 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, 22 கடன்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும்; அவை விரைவில், வாராக் கடன் வங்கிக்கு மாற்றப்படும் என்றும், ‘யூனியன் பாங்க் ஆப் இந்தியா’வின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான ராஜ்கிரண் ராய் தெரிவித்துள்ளார்.

கடந்த பட்ஜெட் அறிவிப்பின் போது, வாராக் கடன்களை நிர்வகிக்க, என்.ஏ.ஆர்.சி., எனும், ‘தேசிய சொத்து மறுசீரமைப்பு நிறுவனம்’ அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதை, பொதுவாக வாராக் கடன் வங்கி என்பார்கள்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்கிரண் ராய் கூறியதாவது:என்.ஏ.ஆர்.சி., அமைக்கப்பட்டதும், அது விரைவாக செயல்பட ஏதுவாக, அனைத்து தகவல்களையும் தயார் நிலையில் வைத்துக் கொள்ளுமாறு அனைத்து முன்னணி வங்கிகளிடமும், ‘இந்திய வங்கிகள் கூட்டமைப்பு’ தெரிவித்தது.

இதையடுத்து முதல் கட்டமாக, 89 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, 22 வாராக் கடன்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக நான் கருதுகிறேன்.இந்த கடன்கள் அனைத்தும், 500 கோடி ரூபாய்க்கும் மேற்பட்டவையாகும்.இந்த, 22 கணக்குகள் குறித்து முன்னணி வங்கிகள், மற்ற வங்கிகளுடன் கூட்டங்களை நடத்தியுள்ளன. மேலும், என்.ஏ.ஆர்.சி., அமைத்ததும் அதற்கு அவற்றை மாற்றுவதற்கான கொள்கை ரீதியான ஒப்புதலையும் பெற்று உள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)