பதிவு செய்த நாள்
08 ஜூன்2021
21:19
கோல்கட்டா:வங்கிகளின் வாராக் கடன் விவகாரத்தில், முதல் கட்டமாக, 89 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, 22 கடன்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும்; அவை விரைவில், வாராக் கடன் வங்கிக்கு மாற்றப்படும் என்றும், ‘யூனியன் பாங்க் ஆப் இந்தியா’வின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான ராஜ்கிரண் ராய் தெரிவித்துள்ளார்.
கடந்த பட்ஜெட் அறிவிப்பின் போது, வாராக் கடன்களை நிர்வகிக்க, என்.ஏ.ஆர்.சி., எனும், ‘தேசிய சொத்து மறுசீரமைப்பு நிறுவனம்’ அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதை, பொதுவாக வாராக் கடன் வங்கி என்பார்கள்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்கிரண் ராய் கூறியதாவது:என்.ஏ.ஆர்.சி., அமைக்கப்பட்டதும், அது விரைவாக செயல்பட ஏதுவாக, அனைத்து தகவல்களையும் தயார் நிலையில் வைத்துக் கொள்ளுமாறு அனைத்து முன்னணி வங்கிகளிடமும், ‘இந்திய வங்கிகள் கூட்டமைப்பு’ தெரிவித்தது.
இதையடுத்து முதல் கட்டமாக, 89 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, 22 வாராக் கடன்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக நான் கருதுகிறேன்.இந்த கடன்கள் அனைத்தும், 500 கோடி ரூபாய்க்கும் மேற்பட்டவையாகும்.இந்த, 22 கணக்குகள் குறித்து முன்னணி வங்கிகள், மற்ற வங்கிகளுடன் கூட்டங்களை நடத்தியுள்ளன. மேலும், என்.ஏ.ஆர்.சி., அமைத்ததும் அதற்கு அவற்றை மாற்றுவதற்கான கொள்கை ரீதியான ஒப்புதலையும் பெற்று உள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|