பதிவு செய்த நாள்
08 ஜூன்2021
21:21
மும்பை:கொரோனா இரண்டாவது அலை மற்றும் அதன் தொடர்ச்சியான ஊரடங்குகள் ஆகியவற்றின் காரணமாக, வர்த்தக வாகனங்கள் விற்பனை வளர்ச்சி பாதிக்கப்படும் என, தர நிர்ணய நிறுவனமான, ‘கிரிசில்’ தெரிவித்துள்ளது.
இது குறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது:கொரோனா காரணமாக, நடப்பு நிதியாண்டில் வர்த்தக வாகன விற்பனை வளர்ச்சி, 23 – 28 சதவீதமாக கட்டுப்படுத்தப்படக் கூடும்.இதற்கு முன் விற்பனை வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில், 32 – 37 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டிருந்தது.
வளர்ச்சி கணிப்புகள் ஒருபுறமிருக்க, வர்த்தக வாகன விற்பனை எண்ணிக்கையும், நடப்பு நிதியாண்டில், 30 சதவீதம் அளவுக்கு குறையும் என தெரிகிறது. கடந்த நிதியாண்டில், இதற்கு முந்தைய, 10 ஆண்டுகளில் இல்லாத வகையில், 21 சதவீதம் அளவுக்கு விற்பனை வீழ்ச்சி கண்டது.
கடந்த இரு நிதியாண்டுகளாகவே வர்த்தக வாகன விற்பனை சரிவை கண்டு வரும் நிலையில், இந்த நிதியாண்டிலும் பாதிப்பை காண்கிறது.ஓரளவு மீட்சி காண துவங்கிய நிலையில், இரண்டாவது அலை மீண்டும் சரிவை நோக்கி தள்ளியுள்ளது.
ஏப்ரல் மாதத்தில் போக்குவரத்து கட்டணம், டீசல் விலை அதிகரித்து வந்த போதிலும், 20 சதவீதம் அளவுக்கு சரிந்துள்ளது. மே மாதத்தில் ஊரடங்கும் சேர்ந்து கொண்டது. இரண்டாவது காலாண்டில் ஊரடங்குகள் தளர்ந்து, மீண்டும் விற்பனை அதிகரிக்க துவங்கும் என எதிபார்க்கலாம்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|