பதிவு செய்த நாள்
08 ஜூன்2021
21:23
புதுடில்லி:‘ஷியாம் மெட்டாலிக்ஸ்அண்டு எனர்ஜி’ நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதை முன்னிட்டு, பங்கின் விலையை நிர்ணயித்து அறிவித்துள்ளது.
உருக்கு தயாரிப்பில் ஈடுபட்டுள்ள, ‘ஷியாம் மெட்டாலிக்ஸ் அண்டு எனர்ஜி’ நிறுவனம், 14ம் தேதியன்று, புதிய பங்கு வெளியீட்டுக்கு வருகிறது. இதையடுத்து, ஒரு பங்கின் விலை, 303 – 306 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக, 909 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது. இதில், 657 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பங்குகளை விற்பனைக்கு விடுக்க இருக்கிறது.
மேலும், 252 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குதாரர்களுடைய பங்குகளையும் விற்பனை செய்ய உள்ளது. இந்த பங்கு வெளியீட்டின்போது, 3 லட்சம் பங்குகள், அதன் தகுதி வாய்ந்த ஊழியர்களுக்காக ஒதுக்கப்பட உள்ளது. மேலும், அவர்களுக்கு பங்கின் விலையில், 15 ரூபாய் தள்ளுபடி செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பங்கு வெளியீட்டின் போது, முதலீட்டாளர்கள் வாங்குவதற்கான குறைந்தபட்ச பங்குகளின் எண்ணிக்கை, 45 ஆகும். மேலும் வாங்க விரும்பும்பட்சத்தில் இதன் மடங்குகளில் பங்குகளை வாங்கிக் கொள்ளலாம். புதிய பங்கு வெளியீடு, 14ம் தேதி துவங்கி, 16ம் தேதியுடன் முடிவடைகிறது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|