பதிவு செய்த நாள்
09 ஜூன்2021
20:49
சென்னை:அனைத்து வங்கி வாடிக்கையாளர்களும் பயன்படுத்தக் கூடிய, ‘ஐமொபைல் பே’ என்ற மொபைல் போன் செயலியை, பிற வங்கிகளை சேர்ந்த 20 லட்சம் பேர், பயன்படுத்த துவங்கி உள்ளதாக, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, அந்த வங்கி வெளியிட்ட செய்திக்குறிப்பு:அனைத்து வங்கி வாடிக்கையாளர்களும் பயன்படுத்தக் கூடிய வகையில், ‘ஐமொபைல் பே’ என்ற செயலியை, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, இந்தியாவிலேயே முதல் முறையாக டிசம்பரில் அறிமுகம் செய்தது.
அனைத்து வங்கி வாடிக்கையாளர்களும், யு.பி.ஐ., அடையாள எண்ணை உருவாக்கி, அதன் வாயிலாக, இந்த செயலியை பயன்படுத்த முடியும். இதன் வாயிலாக, பணம் அனுப்புதல், வர்த்தகம் செய்தல், பொருட்கள் வாங்குதல், கட்டணங்கள் செலுத்துதல் என, அனைத்து சேவைகளையும் பெறலாம்.மேலும், கடன் பெறுதல், புதிய கணக்கு துவங்குதல் உட்பட, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி சேவைகள் அனைத்தையும் பெறலாம்.
இந்த செயலி அறிமுகப்படுத்திய ஐந்து மாதங்களில், ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி இல்லாத பிற வங்கி வாடிக்கையாளர்கள், 20 லட்சம், இந்த செயலியை பயன்படுத்தத் துவங்கி உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|