பதிவு செய்த நாள்
09 ஜூன்2021
20:55
புதுடில்லி:வாகன பாகங்கள் தயாரிப்பு நிறுவனமான, ‘சோனா காம்ஸ்டார்’, புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதை முன்னிட்டு, அதன் பங்கு விலையை நிர்ணயித்து அறிவித்துள்ளது.
இந்நிறுவனம், 14ம் தேதியன்று, புதிய பங்கு வெளியீட்டுக்கு வருகிறது. இதையடுத்து, ஒரு பங்கின்விலை, 285 – 291 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய பங்கு வெளியீடு, 14ம் தேதி துவங்கி, 16ம் தேதியுடன் முடிவடைய உள்ளது.
‘சோனா காம்ஸ்டார்’ நிறுவனம், இந்த பங்கு வெளியீட்டின் வாயிலாக, 5,550 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது. இதற்கு முன், 5,700 கோடி ரூபாய் திரட்ட திடமிட்டிருந்த நிலையில், இப்போது, 5,550 கோடி ரூபாயாக குறைத்துக் கொண்டுள்ளது.இந்த பங்கு வெளியீட்டில், 300 கோடி ரூபாய்க்கு புதிய பங்குகளையும், 5,250 கோடி ரூபாய்க்கு பங்குதாரர்கள் வசம் இருக்கும் பங்குகளையும் விற்பனை செய்ய உள்ளது.
திரட்டப்படும் நிதியில், 241 கோடி ரூபாயை கடனை அடைக்கவும், மீதியை பொதுவான நிறுவன தேவைகளுக்கும் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.இந்நிறுவனம், வாகனங்களுக்கு தேவைப்படும் மிக சிக்கலான கியர் உள்ளிட்ட பாகங்களை வடிவமைத்து, தயாரித்து வழங்கி வருகிறது.அமெரிக்கா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|