வாடிக்கையாளர்கள் தேவையை ஆன்லைன் மூலம் செய்யும்  பிஎஸ்ஹெச் ஹோம் அப்ளையன்சஸ்வாடிக்கையாளர்கள் தேவையை ஆன்லைன் மூலம் செய்யும் பிஎஸ்ஹெச் ஹோம் ... ... கேனனின் 4 புதிய வகை பிரிண்டர்கள் அறிமுகம் கேனனின் 4 புதிய வகை பிரிண்டர்கள் அறிமுகம் ...
டாடா டிஜிட்டல் வசமாகிறது 1 எம்.ஜி., நிறுவனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஜூன்
2021
20:38

புதுடில்லி:‘டாடா டிஜிட்டல்’ நிறுவனம், 1 எம்.ஜி., நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை கையகப்படுத்த உள்ளது.‘டாடா சன்ஸ்’ குழுமத்துக்கு சொந்தமானது, ‘டாடா டிஜிட்டல்’ நிறுவனம்.இந்நிறுவனம், மின்னணு வர்த்தகத்தில் அதிக கவனம் எடுத்து வருகிறது.

டாடா நிறுவனம் வாகனத்திலிருந்து உப்பு வரை அதன் அனைத்து தயாரிப்புகளையும் ஒரே மின்னணு தளத்தில் கிடைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக மெகா செயலியையும் உருவாக்கி வருகிறது.இதன் ஒரு பகுதியாக, மருந்து உள்ளிட்ட ஆரோக்கியம் சார்ந்த பிரிவிலும் கால்பதிக்க திட்டமிட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, முன்னணி இ – ஹெல்த் நிறுவனமான 1எம்.ஜி., நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை கையகப்படுத்த உள்ளது.இருப்பினும், எவ்வளவு ரூபாய்க்கு கையகப்படுத்த உள்ளது என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை. ஆனாலும் 550 கோடி ரூபாயை டாடா முதலீடு செய்ய இருப்பதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மருத்துவ பிரிவில் இ – பார்மஸி, இ – டயக்னாஸ்டிக், டெலி கன்சல்ட்டேசன் ஆகிய பகுதிகள் முக்கியத்துவம் வாய்ந்தவை என்றும், இவை வேகமாக வளர்ச்சி காணும் வகையில் இருப்பதாகவும், ‘டாடா டிஜிட்டல்’ தெரிவித்துள்ளது. இத்துறையானது 7,300 கோடி ரூபாய் சந்தை மதிப்பு கொண்டதாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.கடந்த 2015ல் துவங்கப்பட்ட 1 எம்.ஜி., நிறுவனம், இ – ஹெல்த் பிரிவில் முன்னணி வகிக்கும்நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)