பதிவு செய்த நாள்
10 ஜூன்2021
20:49
புதுடில்லி:பயணியர் வாகன சில்லரை விற்பனை, கடந்த மே மாதத்தில், 59 சதவீதம் அளவுக்கு சரிவை கண்டுள்ளது என்றும், மொத்தம், 85 ஆயிரத்து, 733 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், வாகன முகவர்கள் கூட்டமைப்பான, எப்.ஏ.டி.ஏ., தெரிவித்துள்ளது.
இக்கூட்டமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது:கடந்த ஏப்ரல் மாதத்தில் மொத்தம், 2.09 லட்சம் வாகனங்கள் விற்பனை ஆகியிருந்த நிலையில், மே மாதத்தில் விற்பனை, 59 சதவீதம் அளவுக்கு சரிந்துள்ளது.இரு சக்கர வாகன விற்பனையை பொறுத்தவரை, 53 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரலில், 8.65 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில், மே மாதத்தில், 4.10 லட்சம் வாகனங்களே விற்பனை ஆகியிருக்கிறது.மூன்று சக்கர வாகன விற்பனை மிகக் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது. 76 சதவீதம் சரிவை கண்டுள்ளது.வர்த்தக வாகனங்களை பொறுத்தவரை, விற்பனையில், 66 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது.
கொரோனா இரண்டாவது அலையில், முதல் அலை போல அல்லாமல், கிராம பகுதிகளும் பாதிப்பை கண்டுள்ளது. இதன் காரணமாக, வாகன விற்பனை பெரிதும் பாதிப்பை கண்டுள்ளது.டிராக்டர் விற்பனையும் இரண்டாவது அலையில் சரிவை கண்டுள்ளது; 57 சதவீதம் குறைந்துள்ளது. இவ்வாறு தெரிவித்து உள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|