பதிவு செய்த நாள்
11 ஜூன்2021
22:11
புதுடில்லி:கே.ஐ.எம்.எஸ்., எனும், ‘கிருஷ்ணா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ்’ நிறுவனம், பங்கு வெளியீட்டுக்கு வருவதை அடுத்து, அதன் பங்கின் விலையை நிர்ணயித்து அறிவித்துள்ளது.
இந்நிறுவனம், 16ம் தேதியன்று பங்கு வெளியீட்டுக்கு வருவதை அடுத்து, பங்கின் விலையை, 815 – 825 ரூபாயாக நிர்ணயித்து அறிவித்துள்ளது.புதிய பங்கு வெளியீடு, 16ம் தேதி துவங்கி, 18ம் தேதியன்று முடிவடைகிறது.ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் உள்ள மிகப் பெரிய கார்ப்பரேட் ஹெல்த்கேர் குழுமங்களில் ஒன்றாக இந்நிறுவனம் உள்ளது.
‘கே.ஐ.எம்.எஸ்., ஹாஸ்பிட்டல்ஸ்’ எனும் பெயரில், ஒன்பது பல் சிறப்பு மருத்துவமனைகளை இந்நிறுவனம் கொண்டு உள்ளது.இந்த பங்கு வெளியீட்டின்போது, இந்நிறுவனம், 200 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய பங்குகளையும்; நிறுவனர்கள் மற்றும் பங்குதாரர்கள் வசம் இருக்கும், 2.35 கோடி பங்குகளையும் விற்பனை செய்ய இருக்கிறது.
இதில், 20 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகள், அதன் தகுதி வாய்ந்த ஊழியர்களுக்கு வழங்கப்பட உள்ளது.இந்த பங்கு வெளியீட்டின் வாயிலாக, 2,144 கோடி ரூபாய் அளவுக்கு நிதி திரட்ட முடியும் என, இந்நிறுவனம் கருதுகிறது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|