பதிவு செய்த நாள்
13 ஜூன்2021
00:38
புதுடில்லி:ஐ.டி.பி.ஐ., வங்கி, அதன் வாடிக்கையாளர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும், 20 இதழ்கள் கொண்ட காசோலை புத்தகத்தை இலவசமாக வழங்கி வருகிறது. இந்நிலையில், இதற்கு மேல் காசோலை தேவைப்பட்டால், ஒரு காசோலை இதழுக்கு, 5 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என வங்கி தெரிவித்து உள்ளது.
இது, அடுத்த மாதம் முதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளது.தற்போது வாடிக்கையாளர்கள், கணக்கு துவங்கிய முதல் ஆண்டில், 60 காசோலைகள் வரை இலவசமாக பெறலாம் என்றும்; இதை தொடர்ந்து வரும் ஆண்டுகளில், 50 காசோலை வரை இலவசமாக பெறலாம் என்றும் உள்ளது.
இதற்கு மேல் தேவைப்பட்டால் ஓர் இதழுக்கு, 5 ரூபாய் வீதம் செலுத்தி பெற்றுக் கொள்ள முடியும்.இந்நிலையில், வங்கி, அதன் சேமிப்பு கணக்கு சம்பந்தமான சேவைகள் குறித்து சில மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது.
குறிப்பாக இலவச பரிவர்த்தனைகள் குறித்து, சில மாற்றங்களை அடுத்த மாதம் முதல் கொண்டு வருகிறது.இருப்பினும், 'சப்கா' சேமிப்பு கணக்குகளுக்கு இந்த விதிமுறைகள் கிடையாது என்றும்; அவர்கள் எவ்வளவு காசோலைகள் வேண்டுமானாலும் ஓராண்டில் பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.பணப் பரிவர்த்தனைகளிலும், பிற வங்கி ஏ.டி.எம்., வாயிலான பரிவர்த்தனை சேவைகளிலும் பல மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது கிராமங்கள், நகர்ப்புறங்களுக்கு இடையே வேறுபடும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|