‘ட்ரோன்’ மூலம் வினியோகம் ‘பிளிப்கார்ட்’ முயற்சி ‘ட்ரோன்’ மூலம் வினியோகம் ‘பிளிப்கார்ட்’ முயற்சி ... வருமான வரிச் சலுகை தொடர்பாக   அறிய வேண்டிய நிபந்தனைகள் வருமான வரிச் சலுகை தொடர்பாக அறிய வேண்டிய நிபந்தனைகள் ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
அவசர கால நிதிக்காக தங்கத்தில் முதலீடு செய்யலாமா?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2021
18:57

நெருக்கடி காலத்தில் கைகொடுக்கும் அவசர கால நிதியை உருவாக்க, தங்கத்தில் முதலீடு செய்வது ஏற்ற உத்தியாக அமையுமா என ஒரு அலசல்.

தங்கத்தை நகையாக வாங்கி வைப்பது என்பது வேறு, முதலீடு நோக்கில் தங்கத்தை அணுகுவது வேறு. முதலீடு நோக்கில், காகித வடிவில் அல்லது டிஜிட்டல் வடிவில் தங்கத்தை வாங்குவதே ஏற்றது என கருதப்படுகிறது. மேலும், முதலீட்டு தொகுப்பில் தங்கத்தின் அளவு குறிப்பிட்ட அளவு மட்டுமே இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது. எனினும், பெரும்பாலான குடும்பங்களில், நகை வடிவில் தங்கத்தை வாங்கி வைக்கும் வழக்கமே அதிகம் இருக்கிறது. தங்க நகைகளை, அவசரத் தேவைக்காக அடகு வைத்து பணம் வாங்கும் பழக்கமும் பரவலாக இருக்கிறது.


அவசர கால நிதி


தற்போது கொரோனா பாதிப்புக்கு மத்தியில், பலரும் தங்க நகைக்கடனை நாடும் நிலை ஏற்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக, பணியிழப்பு அல்லது ஊதிய குறைப்புக்கு உள்ளானவர்கள் நிலைமையை சமாளிக்க தங்க நகைக்கடனை அதிகம் நாடுகின்றனர்.


அவசர தேவைக்கான தங்கத்தை அடமானம் வைத்து பணம் பெறுவதும் எளிதாகவே இருக்கிறது. தங்கம் அவசர தேவைக்கு கைகொடுப்பது உண்மை என்றாலும், அவசர கால நிதியை உருவாக்க தங்கத்தில் முதலீடு செய்வது ஏற்றதா எனும் கேள்வி எழுகிறது.


நெருக்கடி காலங்களில் பயன்படுத்திக்கொள்ள கூடிய வகையிலான, ஆறு மாத கால அளவிலான, அடிப்படை செலவுகளுக்கான தொகையாக இது அமைகிறது.பொதுவாக தங்கம் பணவீக்கத்திற்கு எதிராக பாதுகாப்பு அளிப்பதாக கருதப்படுகிறது. தங்கத்தில் முதலீடு செய்வதன் பலனாகவும் இது அமைகிறது.


எனினும், அவசர கால நிதியை உருவாக்க விரும்புகிறவர்கள், தங்கத்தில் முதலீடு செய்வது ஏற்றதாக இருக்காது என்றே நிதி வல்லுனர்கள் கருதுகின்றனர். ஏனெனில், அவசர கால நிதி என்பது, அடிப்படையில் பணமாக்கும் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும்.


சேமிப்பு கணக்கு


மேலும், முதலீடு செய்யும் போது அசலின் மதிப்பு பாதிக்காத வகையிலும் இருக்க வேண்டும். இந்த இரண்டுமே தங்க முதலீட்டில் சிக்கலாக அமையலாம் என்கின்றனர்.தங்கத்தை விற்கலாம் அல்லது அடமானம் வைக்கலாம் என்றாலும், உடனடி தேவைக்கு ஏற்ப இது எளிதாக அமையாது. மேலும், தங்கத்தை அன்றைய விலைக்கே விற்க முடியும்.


தங்கத்தின் ஏற்ற இறக்கமான அதன் தன்மை காரணமாக இது குறைவானதாகவும் இருக்கலாம். இதனால் தவறான நேரத்தில் விற்க வேண்டிய நிலை வரலாம். மாறாக, வங்கி சேமிப்பு கணக்கில் பணத்தை போட்டு வைத்திருந்தால் உடனடியாக விலக்கி கொள்ளலாம். எனவே, அவசர கால நிதியை உருவாக்க, தங்கத்தில் முதலீடு செய்வது சரியான உத்தியாக அமையாது என்கின்றனர்.


அவசர கால நிதியை பொறுத்தவரை பணமாக்கும் தன்மையும், பாதுகாப்புமே முக்கியமாகும். எனவே, இதற்கென தனியே சேமிப்பு கணக்கை துவக்கலாம். ஒரு பகுதியை வைப்பு நிதியாகவும் வைத்திருக்கலாம். ‘மியூச்சுவல் பண்டு’களில் பரிட்சயம் உள்ளவர்கள் எனில் ‘லிக்விட் பண்ட்’ அல்லது குறுகிய கால பண்ட்களிலும் முதலீடு செய்யலாம்.


ஒரு மாத செலவுக்கான தொகையை சேமிப்பு கணக்கிலும், இரண்டு மாத செலவுக்கான தொகையை வைப்பு நிதியிலும், மிதி தொகையை லிக்விட் பண்டிலும் பிரித்து முதலீடு செய்வது ஏற்றதாக இருக்கும்.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)