பதிவு செய்த நாள்
13 ஜூன்2021
19:03
கட்டுமான பொருட்களின் விலை உயர்வு காரணமாக, அடுத்து வரும் மாதங்களில் வீடுகளின் விலை உயரும் வாய்ப்பு இருப்பதாக ரியல் எஸ்டேட் அமைப்பான, ‘கிரெடாய்’ தெரிவித்துள்ளது.
கடந்த ஓராண்டாக சிமென்ட், ஸ்டீல் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் விலை அதிகரித்து வருவதால், கட்டுமான செலவுகள் அதிகரித்து இருப்பதாகவும், இதன் பயனாக வீடுகள் விலை 20 சதவீதம் வரை உயலாம் என கிரெடாய் தெரிவித்துள்ளது.
கட்டுமான நிறுவனங்கள் ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களுக்கு விலையை உயர்த்தாமல் இருக்கலாம் என்றாலும், புதிதாக வீடு வாங்குபவர்களுக்கு விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, கொரோனா இரண்டாம் அலையால், ரியல் எஸ்டேட் விற்பனை பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.இந்த ஆண்டு துவக்கம் முதல் ரியல் எஸ்டேட் நிலை மேம்பட்டு வந்த நிலையில், இரண்டாம் அலை ரியல் எஸ்டேட் வளர்ச்சியை பாதித்துள்ளது.
கொரோனா முதல் அலையை விட, இரண்டாம் அலையின் பாதிப்பு அனைத்து தரப்பினர் மீதும் கடுமையாக இருப்பதாக தெரிவித்துள்ள கிரெடாய், வீடுகளின் விலை உயர்த்தப்பட்டாலும் கட்டுமான நிறுவனங்களின், லாபம் அதிகரிக்க வாய்ப்பில்லை என்றும் தெரிவித்துள்ளது.
மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|