பதிவு செய்த நாள்
15 ஜூன்2021
07:42
புதுடில்லி : நாட்டின் மொத்த விலை பணவீக்கம், கடந்த மே மாதத்தில் இதுவரை இல்லாத வகையில் 12.94 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வுக்கு, கச்சா எண்ணெய் மற்றும் உற்பத்தி பொருட்கள் விலை அதிகரித்தது காரணமாக அமைந்துள்ளது என, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:கடந்த ஆண்டு மே மாதத்தில் மொத்தவிலை பணவீக்கம், மைனஸ் 3.37 சதவீதமாக இருந்தது. இந்த மிக குறைந்த அடிப்படை நிலையும் தற்போது மே மாதத்தில் அதிகமாக இருப்பதாக காட்டுகிறது.கடந்த 5 மாதங்களாகவே தொடர்ந்து மொத்த விலை பணவீக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த ஏப்ரலில் 10.49 சதவீதமாக, இரட்டை இலக்கத்துக்கு உயர்ந்தது. தற்போது மே மாதத்தில் 12.94 சதவீதமாக மேலும் உயர்ந்துள்ளது.இந்த மொத்த விலை பணவீக்க அதிகரிப்புக்கு முக்கிய காரணம் கச்சா எண்ணெய், உற்பத்தி பொருட்கள் ஆகியவற்றின் விலை அதிகரித்தது ஆகும். எரிபொருட்கள் பணவீக்கம் 37.61 சதவீதம் அதிகரித்துள்ளது.
உற்பத்தி பொருட்கள் பணவீக்கம் 10.83 சதவீதம் அதிகரித்து உள்ளது.இருப்பினும், உணவு பொருட்கள் பிரிவில் பணவீக்கம், வெங்காயம் விலை அதிகரித்த போதிலும், ஓரளவு குறைந்துள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|