பதிவு செய்த நாள்
15 ஜூன்2021
21:55
புதுடில்லி:கொரோனா இரண்டாவது அலைக்கு மத்தியில், இந்திய பங்குச் சந்தைகள், ‘தகர்க்க இயலா இயல்பு’ கொண்டதாக இருப்பதாக, உலகளாவிய சொத்து மேலாண்மை நிறுவனமான, ஜூலியஸ் பேர் தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மார்க் மேத்யூஸ் கூறியதாவது:நான் இரண்டாவது அலையால் மிகவும் அதிர்ச்சியடைந்தேன்; திகிலடைந்தேன். ஆனால், இந்திய சந்தை அதற்கு எதிர்வினையாற்றும் விதத்தை பார்த்ததும், நான் அதிக அதிர்ச்சியடைந்தேன்.
இந்திய சந்தைகள் தகர்க்க இயலா இயல்பு கொண்டதாக இருக்கிறது.பேரழிவின் காலத்தில், சந்தையும் சரிய வேண்டும் என்ற அர்த்தத்தில் இதை கூறவில்லை. இந்திய சந்தை மிக வலுவாக இருக்கிறது என நான் நினைக்கிறேன்.
இந்திய பங்குச் சந்தைகளை பொறுத்தவரை, ‘சென்செக்ஸ்’ அடுத்த ஆண்டு மார்ச்சுக்குள், 58 ஆயிரத்து, 500 புள்ளிகளை எட்டும் எனக் கருதுகிறேன்.இவ்வாறு அவர் கூறினார். நேற்றைய பங்குச் சந்தை வர்த்தகத்தில், சென்செக்ஸ், 52 ஆயிரத்து, 773 புள்ளிகள் எனும் புதிய உச்சத்தை தொட்டதுகுறிப்பிடத்தக்கது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|