சில்லரை விலை பணவீக்கம் 6.3 சதவீதமாக அதிகரித்தது சில்லரை விலை பணவீக்கம் 6.3 சதவீதமாக அதிகரித்தது ...  சில்லரை விற்பனை  75 சதவீதம் சரிவு சில்லரை விற்பனை 75 சதவீதம் சரிவு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
மீண்டும் தொழில்நுட்ப சிக்கலில் மாட்டிய எச்.டி.எப்.சி., வங்கி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜூன்
2021
00:32

புதுடில்லி:நேற்று எச்.டி.எப்.சி.,வங்கி செயலியில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்னையால், வாடிக்கையாளர்கள் அதை பயன்படுத்துவதில் சிரமத்தை எதிர்கொள்ள வேண்டியதாகிவிட்டது.

அண்மைக் காலமாக, சில வங்கிகளில் தொழில்நுட்ப கோளாறுகள் அதிகரித்துள்ளன. எச்.டி.எப்.சி., வங்கியிலும் இதுபோன்ற பிரச்னைகள் ஏற்கனவே வந்துள்ளன.ரிசர்வ் வங்கியும் தலையிட்டு, ‘ஆன்லைன்’ சேவைகளை சரியாக வழங்குமாறு அறிவுறுத்தி இருந்தது. இப்போது மீண்டும் அதன் செயலியில் கோளாறு ஏற்பட்டு இருக்கிறது.

நேற்று வங்கியின் செயலியில் பிரச்னை எழவும், வாடிக்கையாளர்கள், இன்டர்நெட் பேங்கிங் வசதியை பயன்படுத்தி கொள்ளுமாறும்; விரைவில் மொபைல் பேங்கிங் கோளாறு சரிசெய்யப்படும் என்றும் வங்கி தெரிவித்தது.இதையடுத்து, ஒரு மணி நேரத்தில் பிரச்னை சரிசெய்யப்பட்டது.எச்.டி.எப்.சி., வங்கியின் ஆன்லைன் வங்கி சேவைகளில் அடிக்கடி சிக்கல்கள் ஏற்படவும், ரிசர்வ் வங்கி இதை கடுமையான ஆய்வுக்கு உட்படுத்தியது.

கடந்த டிசம்பரில், இது போன்றதொரு தொழில்நுட்ப பிரச்னை ஏற்பட்ட போது, தொழில்நுட்ப பிரச்னைகளை சரிசெய்யாமல், புதிதாக எந்த ஒரு டிஜிட்டல் முயற்சியையும் மேற்கொள்ள கூடாது என்றும்; கிரெடிட் கார்டு உள்ளிட்டவற்றை புதிதாக வழங்கக்கூடாது என்றும் இவ்வங்கிக்கு ரிசர்வ் வங்கி ஆணை பிறப்பித்தது.

இந்திய வங்கி துறை வரலாற்றில், இதற்கு முன் இப்படி நடந்தது கிடையாது.இதேபோல், கடந்த 2019 மற்றும் 2019ம் ஆண்டுகளிலும் தொழில்நுட்ப பிரச்னைகளை இவ்வங்கி சந்தித்தது.இந்நிலையில் இப்போது மீண்டும் சிக்கலை சந்தித்துள்ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)