பதிவு செய்த நாள்
16 ஜூன்2021
00:32
புதுடில்லி:நேற்று எச்.டி.எப்.சி.,வங்கி செயலியில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்னையால், வாடிக்கையாளர்கள் அதை பயன்படுத்துவதில் சிரமத்தை எதிர்கொள்ள வேண்டியதாகிவிட்டது.
அண்மைக் காலமாக, சில வங்கிகளில் தொழில்நுட்ப கோளாறுகள் அதிகரித்துள்ளன. எச்.டி.எப்.சி., வங்கியிலும் இதுபோன்ற பிரச்னைகள் ஏற்கனவே வந்துள்ளன.ரிசர்வ் வங்கியும் தலையிட்டு, ‘ஆன்லைன்’ சேவைகளை சரியாக வழங்குமாறு அறிவுறுத்தி இருந்தது. இப்போது மீண்டும் அதன் செயலியில் கோளாறு ஏற்பட்டு இருக்கிறது.
நேற்று வங்கியின் செயலியில் பிரச்னை எழவும், வாடிக்கையாளர்கள், இன்டர்நெட் பேங்கிங் வசதியை பயன்படுத்தி கொள்ளுமாறும்; விரைவில் மொபைல் பேங்கிங் கோளாறு சரிசெய்யப்படும் என்றும் வங்கி தெரிவித்தது.இதையடுத்து, ஒரு மணி நேரத்தில் பிரச்னை சரிசெய்யப்பட்டது.எச்.டி.எப்.சி., வங்கியின் ஆன்லைன் வங்கி சேவைகளில் அடிக்கடி சிக்கல்கள் ஏற்படவும், ரிசர்வ் வங்கி இதை கடுமையான ஆய்வுக்கு உட்படுத்தியது.
கடந்த டிசம்பரில், இது போன்றதொரு தொழில்நுட்ப பிரச்னை ஏற்பட்ட போது, தொழில்நுட்ப பிரச்னைகளை சரிசெய்யாமல், புதிதாக எந்த ஒரு டிஜிட்டல் முயற்சியையும் மேற்கொள்ள கூடாது என்றும்; கிரெடிட் கார்டு உள்ளிட்டவற்றை புதிதாக வழங்கக்கூடாது என்றும் இவ்வங்கிக்கு ரிசர்வ் வங்கி ஆணை பிறப்பித்தது.
இந்திய வங்கி துறை வரலாற்றில், இதற்கு முன் இப்படி நடந்தது கிடையாது.இதேபோல், கடந்த 2019 மற்றும் 2019ம் ஆண்டுகளிலும் தொழில்நுட்ப பிரச்னைகளை இவ்வங்கி சந்தித்தது.இந்நிலையில் இப்போது மீண்டும் சிக்கலை சந்தித்துள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|